போலீஸ் நடவடிக்கை என்ற போர்வையில் இந்த முக்கியமான ஆதாரத்தை சிதைக்க, அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் உள்ளது. 

ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ராஞ்சியின் விமான நிலைய காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் இந்த சோதனையை நடத்தினர். குடிநீர் வழங்கல் அடதிகாரிஒருவரைத் தாக்கியதாக இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரதிக், சுபம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான நிலைய காவல் நிலையத்தில் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க ராஞ்சி காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரண்டு நாட்களுக்கு முன்பு, குடிநீர் துறை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தோஷ் குமாரை விசாரித்தனர். இந்த நேரத்தில் குடிநீர் வழங்கல் அதிகாரியான சந்தோஷ் குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் போது அவர் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கிடையே, முதலமைச்சர் மற்றும் காவல்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. போலீஸ் நடவடிக்கை என்ற போர்வையில் இந்த முக்கியமான ஆதாரத்தை சிதைக்க, அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

"ராஞ்சியில் உள்ள விமான நிலைய சாலையில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகம் ராஞ்சி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காவல்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ளன. போலீஸ் நடவடிக்கை என்ற போர்வையில் இந்த முக்கியமான ஆதாரத்தை சிதைக்க அல்லது அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் உள்ளது."

ஜார்க்கண்ட் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் கூறுகையில், ‘‘ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை மீது இதற்கு முன்பு பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் காங்கிரஸ் தொண்டர்களால் அமலாக்கத்துறை மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் புலனாய்வு அமைப்புகளின் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற பணிகளைத் தடுக்கும் முயற்சியாகும். முதல்வர் ஹேமந்த், கவனமாகக் கேளுங்கள்... ஜார்க்கண்டை வங்காளமாக மாற்ற நாங்கள் விடமாட்டோம். ஊழலுக்காக நீங்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவீர்கள்.

ஹேமந்த் அரசு பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியது. ஹேமந்த் சோரன் ஏற்கனவே அமலாக்கத் துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பணமோசடி குற்றத்திற்காக அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு அரசியலமைப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தியதற்காக ஹேமந்த் அரசு நீண்டகால விளைவுகளைச் சந்திக்கும்’’ என்று எச்சரித்துள்ளார்.