ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க யார் காரணம்?...எத்தனை அமைப்புகள், யாரெல்லாம் எதிராக மனு செய்தனர், தெரியுமா?


ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதிக்க எத்தனை அமைப்புகள் மனு செய்தன, யாரெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தார்கள் என்ற விவரம் வௌியாகி உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற புகாரின் அடிப்படையிலும், தமிழ்நாடு ஜல்லிகட்டு நெறிமுறை சட்டம் 2009ன்கீழ், விலங்குகள் நலச்சட்டங்களுக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மே 7-ந்தேதி போட்டி நடத்த தடைவிதித்து உத்தரவிட்டது. அதன்பின், கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படவில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்தியுள்ளது. 

ஆனால், ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு தடை உருவாக காரணமாக இருந்த விலங்குகள் நல அமைப்புகள், உறுப்பினர்கள் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதன்படி 12 தொண்டு நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு ஒன்று சேர்ந்து உழைத்துள்ளன, 5 விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. மேலும், தனிப்பட்ட முறையில் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். 

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை உருவாக காரணமாக இருந்ததாக கூறப்படும் அமைப்புகள்-
1. பீட்டா-
2. ஏ.டபிள்யு.பி.ஐ.(இந்திய விலங்குகள் நல வாரியம்)
3. எப்.ஐ.ஏ.பி.ஓ.( இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு)
4. எச்.ஏ.எஸ். (ஹியூமேன் அனிமல் சொசைட்டி)
5. சி.யு.பி.ஏ.(கம்பேஷன் அன்லிமிடட் பிளஸ் ஆக்‌ஷன்)
6. எஸ்.பி.சி.ஏ. ( மிருகவதை தடுப்புக்கான சமூகம்)
7. பி.எப்.ஏ.(பீப்பிள் பார் அனிமல்ஸ்)
8. பி.எப்.சி.ஐ. (இந்திய கால்நடைகளுக்கான ஆதரவு அமைப்பு)
9. யு.எஸ்.ஐ. (யூனியன் சொசைட்டி இன்டர்நேஷனல்)
10. ப்ளூ கிராஸ் (ப்ளூ கிராஸ் இந்தியா)
11. எச்.எஸ்.ஐ. ( ஹியுமேன் சொசைட்டி இன்டர்நேஷனல்)
12. டபிள்யு. எஸ்.பி.ஏ.( உலக அளவிலான விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு)

ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள்
1. பீட்டா
2. எப்.ஐ.ஏ.பி.ஓ.( இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு).
3. சி.யு.பி.ஏ.(கம்பேஷன் அன்லிமிடட் பிளஸ் ஆக்‌ஷன்)
4. பி.எப்.ஏ.(பீப்பிள் பார் அனிமல்ஸ்)
5. எச்.எஸ்.ஐ. ( ஹியுமேன் சொசைட்டி இன்டர்நேஷனல்)

மேற்குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்புகளில் பிரதிநிதிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள்.
1. பூர்வா ஜோஷிபுரா(பீட்டா, தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணை உறுப்பினர்)
2. சின்னி கிருஷ்ணா, துணைதலைவர், (இந்திய விலங்குகள் நலவாரியம்), தலைவர், (பி.ஐ.ஏ.பி.ஓ.,) (யு.எஸ்.ஐ.ஞ தலைவர், ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவர்,(டபிள்யு.எஸ்.பி.ஏ). சர்வதேச இயக்குநர்
3. நந்திதா கிருஷ்ணா ( சின்னி கிருஷ்ணாவின் மனைவி)
எச்.ஏ.எஸ். அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர், ப்ளூகிராஸ் அமைப்பின் துணைத்தலைவர், எச்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர்.
4. ஆர்.எம். கார்ப், தலைவர், (விலங்குகள் நல வாரியம்)
5. மேனகா காந்தி, தலைவர், (பி.எப்.ஏ.) 
6. கவுரி மவுலேகி, துணை உறுப்பினர் (இந்திய விலங்குகள் நலவாரியம்), (எஸ்.பி.சி.ஏ. டெஹ்ராடூன்) நிர்வாக செயலாளர், (பி.எப்.ஏ.) துணைத்தலைவர்
7. சவுமியா ரெட்டி, துணை உறுப்பினர்(இந்திய விலங்குகள் நலவாரியம்) , கர்நாடகமகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளர்(கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர்ராமலிங்காரெட்டியின் மகள்)
8. அருண் பிரசன்னா, (பி.எப்.சி.ஐ) நிறுவனர். 

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஆவணங்கள் தாக்கல் செய்தோர் பட்டியல்
1. மணிலால் வலியாட்டே, (இந்திய விலங்குகள் நலவாரியத்தின் அதிகாரி), (கால்நடை மருத்துவர், பீட்டா)
2. அபிஷேக் ராஜே, (இந்திய விலங்குகள் நலவாரிய அதிகாரி)
3. மனோஜ் ஓஸ்வால் (பீட்டா ஆர்வலர், இந்திய விலங்குகள் நலவாரியத்தின் அதிகாரி)

தனிநபராக மனு செய்தவர்கள் பட்டியல்
1. ராதா ராஜன்
(விஜிஆன்லைன், இணையதள நாளேட்டின் ஆசிரியர்), (இந்துஆர்வலர், ஆர்.எஸ்.எஸ். அனுதாபி).
2. சவுமியா ரெட்டி, துணை உறுப்பினர்(இந்திய விலங்குகள் நலவாரியம்) , கர்நாடாக மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளர்(கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர்ராமலிங்காரெட்டியின் மகள்)
3. கவுரி மவுலேகி,துணை உறுப்பினர் (இந்திய விலங்குகள் நலவாரியம்), நிர்வாக செயலாளர், (எஸ்.பி.சி.ஏ. டெஹ்ராடூன்), (பி.எப்.ஏ.) அமைப்பின் துணைத்தலைவர்