ராக்கெட் ஏவுவதை நிறுத்திய இந்தியா...!! இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...!!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என, இஸ்ரோ திடீரென அறிவித்தது. கோளாறு சரி செய்யப்பட்டதும் விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது .
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது . ஜிஎஸ்எல்வி எப்-10 ரக ராக்கெட் பூமியை கண்காணிக்கும் வகை செயற்கைக்கோள் ஆகும், இது நாளை விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது .
இந்தியாவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ பூமியை கண்காணிக்க ஜிசாட்- 1 செயற்கைக்கோளை தயாரித்துள்ளது , இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளி இரண்டாவது ஏது தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை 5:43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது . இதற்கான இறுதிகட்ட பணியான கவுண்டன் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது .
அப்போது ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளில் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது , இந்நிலையில் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என, இஸ்ரோ திடீரென அறிவித்தது. கோளாறு சரி செய்யப்பட்டதும் விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது .