Asianet News TamilAsianet News Tamil

ராக்கெட் ஏவுவதை நிறுத்திய இந்தியா...!! இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என,  இஸ்ரோ திடீரென அறிவித்தது. கோளாறு சரி செய்யப்பட்டதும்  விண்ணில் ஏவப்படுவது  குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது .

isro last minutes stopped launching  bslv f-10 and final minutes found sum technical error
Author
Sriharikota, First Published Mar 4, 2020, 6:38 PM IST

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்  விண்ணில் ஏவப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது . ஜிஎஸ்எல்வி எப்-10  ரக ராக்கெட் பூமியை  கண்காணிக்கும் வகை செயற்கைக்கோள் ஆகும்,  இது நாளை  விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக  இஸ்ரோ அறிவித்துள்ளது . 

isro last minutes stopped launching  bslv f-10 and final minutes found sum technical error

இந்தியாவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ பூமியை கண்காணிக்க ஜிசாட்- 1  செயற்கைக்கோளை தயாரித்துள்ளது ,  இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளி இரண்டாவது ஏது தளத்தில் இருந்து  ஜிஎஸ்எல்வி  எப்-10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை 5:43  மணிக்கு விண்ணில்  ஏவப்பட இருந்தது .  இதற்கான இறுதிகட்ட பணியான கவுண்டன் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது . 

isro last minutes stopped launching  bslv f-10 and final minutes found sum technical error 

அப்போது ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளில் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது , இந்நிலையில் ஜிஎஸ்எல்வி  எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படுவது  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என, இஸ்ரோ திடீரென அறிவித்தது. கோளாறு சரி செய்யப்பட்டதும்  விண்ணில் ஏவப்படுவது  குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios