Asianet News TamilAsianet News Tamil

10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு அதிகரிப்பு! ரயில் விபத்துகளும் குறைவு!

பல ஆண்டுகளாக, இந்திய ரயில்வே பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதனால் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன.

Indian Railways safety improvement in 10 years! Less train accidents! sgb
Author
First Published Jun 18, 2024, 8:41 PM IST | Last Updated Jun 18, 2024, 8:52 PM IST

திங்கள்கிழமை, மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்து. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியாவில் ரயில்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பாகும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்த பெரிய ரயில்வே கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பல ஆண்டுகளாக, இந்திய ரயில்வே பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த, நவீனமயமாக்க மற்றும் மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன.

எல்ஐசியில் வெறும் 75 ரூபாய் கட்டினால் ரூ.14 லட்சம் கிடைக்கும்! பெண் குழந்தைகளுக்கு பெஸ்ட் இன்சூரன்ஸ்!

ரயில்களின் பாதுகாப்பு அதிகரிப்பு:

பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவாக ரயில் விபத்துகளைக் குறைக்கப்பட்டுள்ளன. 2000-01ல் 473 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இது 2022-23ல் 40 ஆக குறைந்தது. 2004 முதல் 2014 வரை ஆண்டுக்கு சராசரியாக 171 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2014 முதல் 2024 வரை, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 68 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியம் (RRSK) 2017-18 இல் ஐந்தாண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடியுடன் தொடங்கப்பட்டது. 2017-18 முதல் 2021-22 வரை பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காக ரூ.1.08 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.45,000 கோடியை வழங்கியது.

கவாச் அமைப்பு தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவரை 1,465 கி.மீ. ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 121 ரயில் இன்ஜின்களில் கவாச் கருவி நிறுவப்பட்டுள்ளது.

பாதுகாப்பை மேலும் மேம்படுத்த, 31 மே 2024 வரை 6,586 நிலையங்களில் மின்னணு இன்டர்லாக்கிங் (EI) பொருத்தப்பட்டுள்ளது. 31 அக்டோபர் 2023 வரை அதிக பிஸியான வழித்தடங்களில் 4,111 RKM களில் தானியங்கி பிளாக் சிக்னலிங் (ABS) செயல்படுத்தப்பட்டது. ஜனவரி 2019 நிலவரப்படி, அகல ரயில்பாதைகளில் உள்ள அனைத்து ஆளில்லா கிராசிங்குகளும் அகற்றப்பட்டுள்ளன.

அனைத்து என்ஜின்களிலும் இப்போது விஜிலென்ஸ் கண்ட்ரோல் டிவைசஸ் (விசிடி) பொருத்தப்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயிலை இயக்க GPS அடிப்படையில் செயல்படும் மூடுபனி பாதுகாப்பு சாதனங்கள் (FSD) வழங்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மொபைல் ஃபோனே இருக்காது; எல்லாமே எங்க நியூராலிங்க் தான்: எலான் மஸ்க் கருத்து

டிராக் பாதுகாப்பிற்காக மேம்பட்ட டிராக் ரெக்கார்டிங் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வழித்தட பராமரிப்பில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில்பாதையின் பாதுகாப்பை சரிபார்க்க தண்டவாளங்களில் மீயொலி சோதனை செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில்...:

2004-14 உடன் ஒப்பிடும்போது 2014-24 இல் ரயில்வேயின் பாதுகாப்பு செயல்திறன் மேம்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கான செலவு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. 2004-14ல் ரூ.70,273 கோடி செலவிடப்பட்டது. 2014-24ல் ரூ.1.78 லட்சம் கோடி.  புதிய பாதைகள் அமைப்பதற்கான செலவு 2.33 மடங்கு அதிகரித்துள்ளது. 2004-14ல் ரூ.47,018 கோடி செலவிடப்பட்டது. 2014-24ல் ரூ.1,09,659 கோடி செலவிடப்பட்டது.

வெல்ட் தோல்விகளில் 87% குறைப்பு. இது 2013-14ல் 3,699 ஆக இருந்து 2023-24ல் 481 ஆக குறைந்துள்ளது. ரெயில் முறிவுகள் 85% குறைந்துள்ளன. 2013-14ல் 2,548 ஆக இருந்து 2023-24ல் 383 ஆக குறைந்துள்ளது. 2004-14 முதல் லெவல் கிராசிங்குகளை அகற்ற ரூ.5,726 கோடி செலவிடப்பட்டது. 2014-24ல் இது 6.4 மடங்கு அதிகரித்து ரூ.36,699 கோடியாக இருந்தது.

31.03.2014 நிலவரப்படி, நாட்டில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் எண்ணிக்கை 8,948. 31.01.19 அன்று பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. 2004-14 ஆம் ஆண்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக் (நிலையங்கள்) எண்ணிக்கை 837 ஆக இருந்தது. 2014-24ல் இது 3.5 மடங்கு அதிகரித்து 2,964 ஆக இருந்தது. 2004-14 இல் தானியங்கி தடுப்பு சமிக்ஞை 1,486 கிமீ வரை நீட்டிக்கப்பட்டது. இது 2014–24ல் இது 2,497 கி.மீ. வரை விரிவடைந்துள்ளது.

மூடுபனி பாஸ் பாதுகாப்பு சாதனங்களின் எண்ணிக்கை 219 மடங்கு அதிகரித்துள்ளது. 31.03.14 அன்று 90 ஆக இருந்தது. 31.03.24 அன்று 19,742 ஆக அதிகரித்தது. LHB பெட்டிகளின் உற்பத்தி 15.8 மடங்கு அதிகரித்துள்ளது. 2004-14ல் 2,337 பெட்டிகள் கட்டப்பட்டன. 2014-24ல் 36,933 பெட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

2014 வரை, ஏசி பெட்டிகளில் தீ மற்றும் புகை கண்டறியும் அமைப்புகள் இல்லை. இது 2024ல் 19,271 ஆக அதிகரிக்கும். 2014ல் பூஜ்ஜியமாக இருந்த ஏசி அல்லாத பெட்டிகளில் தீயை அணைக்கும் கருவிகளின் எண்ணிக்கை 2024ல் 66,840 ஆக உயரும்.

பாஜக மீது புது குண்டை வீசும் மம்தா! திரிணாமுல் பக்கம் தாவும் 3 பாஜக எம்.பி.க்கள்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios