5 per GST on cotton fibre will not make textile expensive Textile News India

பருத்தி, பருத்தி நூலிழை மற்­றும் பருத்தி ஜவு­ளி­க­ளுக்கு, 5 சத­வீத, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­பட்டு உள்­ள­தால், அவற்­றின் விலை அதி­க­ரிக்­கும் என, இத்­து­றை­யி­னர் அச்­சம் தெரி­வித்து உள்­ள­னர்.

ஜி.எஸ்.டி., வரி

தற்­போது, உற்­பத்தி வரி, சேவை வரி, விற்­பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்­ளிட்ட, 16 வகை­யான வரி விகி­தங்­கள் அமலில் உள்ளன. இவ்­வரி­களை நீக்கி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு திட்­டம், நாடு முழு­வ­தும், ஜூலை, 1-ந் தேதி முதல் அம­லுக்கு வர உள்­ளது.

சுதந்­திர இந்­தி­யா­வில், மிகப்­பெ­ரிய வரி சீர்­தி­ருத்­த­மாக கரு­தப்­படும் இத்­திட்­டம், பல்­வேறு பொருட்­களின் விலை குறையவும், அதி­க­ரிக்­க­வும் வழி­வ­குக்­கும். இந்த வகை­யில், ஜி.எஸ்.டி.,யால், பருத்தி ஜவு­ளி­களின் விலை அதி­க­ரிக்க உள்­ளது. தற்­போது, பருத்தி, பருத்தி நூலிழை மற்­றும் துணிக்கு வரி கிடை­யாது. ஒரு­சில மாநில அர­சு­கள் மட்­டும், 2 – 4 சத­வீ­தம் மதிப்பு கூட்டு வரி விதிக்­கின்றன. இந்­நி­லை­யில், ஜி.எஸ்.டி.,யில், பருத்தி, பருத்தி நூலிழை, துணி மற்­றும் 1,000 ரூபாய்க்­குள் உள்ள பருத்தி ஆயத்த ஆடை­கள் ஆகி­ய­வற்­றுக்கு, 5 சத­வீத வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட ஆடைக­ளுக்கு, 12 சத­வீத வரி; செயற்கை நூலிழைக்கு, 18 சத­வீத வரி; செயற்கை நூலிழை துணிக்கு, 5 சத­வீத வரி என, நிர்­ண­யம் செய்­யப்­பட்டு உள்­ளது.

இந்த மாறு­பட்ட வரி விதிப்­பிற்கு, ஜவு­ளித் துறை­யில் ஆத­ர­வும், அதி­ருப்­தி­யும் நில­வு­கிறது.

இது குறித்து இந்­திய ஜவு­ளித் துறை தலை­வர், ஜே.துள­சி­த­ரன் கூறியதாவது:

மதிப்பு கூட்டு வரி
‘‘புதிய வரி விதிப்­பால், ஒட்­டு­மொத்த ஜவு­ளித் துறை பயன் பெறும்; ஆயத்த ஆடை­களின் விலை குறை­யும். இத­னால், நுகர்­வோர்­கள் பயன்பெறு­வர்,’’.

இவ்வாறு இந்­திய ஜவு­ளித் துறை தலை­வர், ஜே.துள­சி­த­ரன் தெரிவித்தார்.
தென்­னிந்­திய ஜவுளி ஆலை­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர், எம்.செந்­தில் குமார் கூறியதாவது:

‘‘கடந்த, 2004 முதல், பருத்தி ஜவுளி­கள், பூஜ்­ஜிய வரி விதிப்­பின் கீழ் உள்ளன. மாநில அரசுகள் விரும்­பி­னால், அவற்­றுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்­க­லாம். ஜி.எஸ்.டி.,யில் விதிக்­கப்­பட்­டுள்ள, 5 சத­வீத வரி­யால், அர­சுக்கு குறிப்­பி­டத்­தக்க வரு­வாய் கிடைக்­கும்.

நுகர்­வோ­ருக்கு பாதிப்பு இல்லை

அத்­து­டன், மதிப்பு கூட்­டப்­பட்ட ஜவு­ளித் துறை­யில், அதி­க­மா­னோரை வரி விதிப்­பின் கீழ் கொண்டு வந்து, சீரான வணிக நடை­மு­றைக்கு துணை புரி­யும். பிராண்­டட் ஆடை­க­ளுக்கு ஏற்­க­னவே, 12.5 சத­வீத வரி விதிப்பு உள்­ள­தால், ஜி.எஸ்.டி.,யால், நுகர்­வோ­ருக்கு எந்த பாதிப்­பும் ஏற்­ப­டாது,’’

இவ்வாறு, தென்­னிந்­திய ஜவுளி ஆலை­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர், எம்.செந்­தில் குமார் கூறி­யுள்­ளார்.

குழப்பம் ஏற்படும்:

விரும்­பி­னால் மட்­டுமே, வரி விதிக்­கும் பிரி­வில் இருந்து கட்­டாய வரி முறைக்கு மாற்­றி­ய­தன் மூலம், பருத்தி ஆடை­களின் உற்­பத்­திச் செலவு அதி­க­ரிக்­கும். இத­னால், பருத்தி ஆடை­கள் விலை உய­ரும். 

ஜி.எஸ்.டி.,யில், ஆயத்த ஆடை­கள் பிரி­வுக்கு, ஒரே சீரான வரி விதிப்பை அமல்­ப­டுத்த வேண்­டும். பல்­வேறு வரி விகி­தங்­கள், வீண் குழப்­பங்­களுக்கு வழி­வ­குக்­கும்.