நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் டெபாசிட் - நிதித்துறை இணையமைச்சர் தகவல்...
நிதியாண்டில் 36 லட்சம் வங்கிக்கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம்டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்கள் அவையில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.
மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்து அவர் பேசுகையில், “ 114 இ வருமானவரிச் சட்டத்தின்படி, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதியாண்டில் ரூ.10 லட்சம் அதற்கு அதிகமாக டெபாசிட் செய்யவர்களின் கணக்கை தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, இம்மாதம் 14-ந்தேதி வரை, ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக, நடப்பு மற்றும் வைப்பு நிதிகளில் 36 லட்சத்து 6 ஆயிரத்து 269 பேர் டெபாசிட் செய்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.
ஆனால், எந்த நிதியாண்டில் இந்த டெபாசிட்கள் செய்யப்பட்டன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.