மும்பை காட்கோபர் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம் கதம், தனது தொகுதியில் நிலவிய நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தலைமுடியை வெட்டிக்கொண்டார்.

மும்பை காட்கோபர் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம் கதம், தனது தொகுதியில் நிலவி வந்த நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தனது தலைமுடியை வெட்டிக்கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காட்கோபர் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை முடி வெட்டிக்கொள்ளப் போவதில்லை என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராம் கதம் சபதம் ஏற்றிருந்தார். தற்போது இதற்கான முக்கிய உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டதையடுத்து, அவர் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.

காட்கோபர் மாடல்

இந்தத் திட்டம் குறித்து ராம் கதம் கூறுகையில், “2 கோடி லிட்டருக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. பாண்டுப் (Bhandup) பகுதியிலிருந்து காட்கோபர் வரை புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மலைப்பாங்கான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் இந்த "காட்கோபர் மாடல்", இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

Scroll to load tweet…

அமைச்சர் ராஜினாமா

வீட்டு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தண்டனை பெற்ற மகாராஷ்டிர அமைச்சர் மணிக்ராவ் கோகடேவின் ராஜினாமா குறித்துப் பேசிய ராம் கதம், "நீதிமன்றத்தின் முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். நெறிமுறைகளின் அடிப்படையில் அவராகவே முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்" என்றார்.

வரவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தல் குறித்துப் பேசுகையில், "யார் தேர்தலில் போட்டியிடுவது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். ஆனால், மும்பை மாநகராட்சியில் எங்களது கொடிதான் பறக்கும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.