பெட்ரோல் பங்கில் இப்படி எழுதி "தொங்கவிட்டால்" பிரச்சனையே இலையாம்..!
தொடார்ந்து பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.மேலும் கடந்த இரண்டு மாத காலமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் சற்று கூட குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
பெட்ரோல் பங்கில் இப்படி எழுதி "தொங்கவிட்டால்" பிரச்சனையே இலையாம்..!
தொடார்ந்து பெட்ரோல் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாத காலமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் சற்று கூட குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
இதற்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுகிறது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து தான் உள்ளது. மும்பையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89 ஐ தாண்டியது. தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85 ஐ தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கீழ்க்கண்ட நான்கு வரிகளை எழுதி பெட்ரோல் பங்கில் எழுதி தொங்க விட வேண்டும் என ஒரு நபர் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்க, அது தீயாக பரவ..அந்த நான்கு வரிகள் உங்கள் பார்வைக்கு......
"அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் இப்பிடி போர்டு வைக்க சொன்னால் மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்....
மூல பொருள்: 34.00
மத்தியஅரசு வரி: 13.00
மாநில அரசு வரி: 30.00
டீலர் கமிஷன்: 6.00
மொத்தம் ருபாய் - (ஒரு லிட்டர்): 83.00
இந்த தகவலை பெரும்பாலான நபர்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றனர்.