Asianet News TamilAsianet News Tamil

BREAKING : ஒடிசாவில் மீண்டும் துயர சம்பவம்.. சரக்கு ரயிலில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

ஒடிசாவின் ஜாஜ்பூரில் சரக்கு ரயிலில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

Four laborers were crushed to death by goods train in Odisha's Jajpur, and 4 others injured
Author
First Published Jun 7, 2023, 7:16 PM IST

ஒடிசாவின் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மோதியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

ஒடிசாவின் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) சரக்கு ரயில் மீது மோதியதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  நான்கு பேர் காயமடைந்தனர். தொழிலாளர்கள் சரக்கு ரயிலுக்கு அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Four laborers were crushed to death by goods train in Odisha's Jajpur, and 4 others injured

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1,000 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சோகமான மூன்று ரயில் விபத்து நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதற்கு முன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் திருப்பி விடப்பட்டது.

மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வண்டிகள் வேறு பாதையில் கவிழ்ந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து வந்த ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பக்க பெட்டிகள், தடம் புரண்ட பெட்டிகள் மீது எதிர் திசையில் சென்று கொண்டிருந்தன. விபத்து நடந்த இடத்தைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ரயில்கள் இயக்கத் தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பயணம் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

இதையும் படிங்க..டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios