Asianet News TamilAsianet News Tamil

மண்ணில் இருந்து கேட்ட அந்த சத்தம்..பதற்றமான விவசாயி - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில், பெண் குழந்தை ஒன்று புதைக்கப்பட்ட நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Found alive after being buried newborn rescued in Gujarat village viral pics
Author
First Published Aug 5, 2022, 2:51 PM IST

குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நிலத்தில் அழுகை சத்தம் கேட்ட விவசாயி ஒருவர், விரைந்து சென்று பார்த்தபோது, மண்ணுக்கு அடியில் இருந்து அழுகை சத்தம் கேட்டுள்ளது. 

Found alive after being buried newborn rescued in Gujarat village viral pics

மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?

உடனடியாக அந்த விவசாயி, குழந்தையை மண்ணுக்கு அடியில் இருந்து தோண்டி எடுத்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நீண்ட நேரமாக நிலத்தடியில் இருந்ததால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், குழந்தையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?

Found alive after being buried newborn rescued in Gujarat village viral pics

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை புதைத்துச் சென்ற பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.உயிருடன் குழந்தையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி - எடப்பாடி டீம் ஹேப்பி !

Follow Us:
Download App:
  • android
  • ios