கேரளாவில் உள்ள தரக்கல் கோவில் திருவிழாவில் யானை ஒன்று வெறிகொண்டு மற்றொரு யானையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

கேரளாவில் உள்ள தரக்கல் கோவில் திருவிழாவில் யானை ஒன்று வெறிகொண்டு மற்றொரு யானையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில், குருவாயூர் ரவிகிருஷ்ணன் என்ற யானை மற்ற யானையான புதுப்பள்ளி அர்ஜுனனைத் தாக்கியதாக கூறப்படுகிறது..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரண்டு யானைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வதையும் பின்னர் ஒருக்கட்டத்தில் ஒரு யானை திரும்பி ஓடுவதையும், மற்றொரு யானை அதை நீண்ட தூரம் துரத்தி செல்வதையும் பார்க்க முடிகிறது. 

அசிங்கமான நிலையில் அயோத்தி ரயில் நிலையம்! துப்புரவு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்!

கோவில் திருவிழாவில் நடந்த இந்த சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும் இதில் திருவிழாவில் கலந்து கொண்ட பலர் காயம் அடைந்தனர். யானை மீது அமர்ந்திருந்தவர்களுக்கு மேலும் யானையின் மேல் அமர்ந்திருந்தவர்கள் தப்பிக்க முயன்றனர் ஆனால் விழுந்து காயமடைந்தனர். பின்னர் இரண்டு யானைகளும் பின்னர் யானைப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் வன விலங்குகளின் தாக்குதலுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் அதிரப்பள்ளி அருகே வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 62 வயது மூதாட்டி உயிரிழந்தார். பிப்ரவரி மாதம், மானந்தவாடு அருகே மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் தமிழக போலீசை அதிரடியாக கைது செய்த வங்கதேச ராணுவம்; விசாரணை வளையத்தில் எஸ்எஸ்ஐ