10 எம்பிகளுக்கான எலெக்ஷன் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலமும், குஜராத்தில் 3 உறுப்பினர்களின் பதவி காலமும் முடியும் தருவாயில் உள்ளது.
மத்திய பிரதேஷத்தில் அனில் மாதேவ் தவே காலமானதால் ஒரு உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் டெரிக் ஓ பிரையன், சீதாராம் யெச்சூரி பதவி காலம் முடிவடைகிறது.
குஜராத்தில் ஸ்மிருதி ராணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைகிறது.
இதனால் மொத்தமாக 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கான இடங்கள் காலியாக போகிறது. இந்நிலையில், இந்த பத்து இடங்களுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.