மணிப்பூர் வீடியோ குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக பொறுப்பாளர் அமித் மாள்வியா அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில்மேற்குவங்க முதலமைச்சர் மம்தா இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரின் ட்விட்டர் பதிவில் “ வெறிபிடித்த கும்பல் இரண்டு பெண்களை கொடூரமாக நடத்துவதை காட்டும் மணிப்பூரின் கொடூரமான வீடியோவைக் கண்டு மனம் உடைந்டேன்.. கோபமடைந்தேன். விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் கண்ட வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதது. மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது. குற்றவாளிகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Scroll to load tweet…

இந்த நிலையில் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் அமித் மாள்வியா மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ மம்தாபானர்ஜியிடம்உங்களுக்கு வெட்கமே இல்லையா?ஜூலை 8 ஆம்தேதி, பஞ்சாயத்துதேர்தல்நாளில், ஒருகிராமசபாவேட்பாளரானபெண், தாக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, ஹவுராவின்பஞ்ச்லாவில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார், நீங்கள் இருக்கும் நபான்னோவில் அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது. பாஜவற்புறுத்தும்வரைஉங்கள்காவல்துறைஎஃப்ஐஆர்கூடஎடுக்கவில்லை.

Scroll to load tweet…

அதேகிராமசபையின் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்ஹேமந்தாராய், அல்ஃபிஎஸ்கே, சுகமல்பஞ்சா, ரணபீர்பஞ்சா, சஞ்சுதாஸ், நூர்ஆலம்மற்றும் 40-50 ஆண்களுடன்சேர்ந்து, அந்த பெண்ணை நிர்வாணமாக்குவதற்கு முன், அவரின் மார்பில்அடித்து, சேலையைகிழித்து, உள்ளாடைகளை அகற்றினர். மேற்குவங்காளத்தின்உள்துறைஅமைச்சரானநீங்கள், சட்டம்ஒழுங்கைநிலைநிறுத்துவீர்கள்என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. உங்கள்உடைந்தஇதயம், சீற்றம்மற்றும்நீதியின்மீதானபோலிஅக்கறைஇல்லாமல்உலகம்ஒருசிறந்தஇடமாக உள்ளது. நீங்கள்ஒருதோல்வியுற்றமுதலமைச்சர். முதலில் வங்காளத்தில்கவனம்செலுத்துங்கள்..” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Scroll to load tweet…

பிரதமர் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ‘INDIA’ எதிர்பார்க்கிறது - கார்கே ட்வீட்..