பணியில் அவரது பிரிவில் ஒரு கோயில் ஒரு குருத்வாரா இருந்தது. அங்கு ஒவ்வொரு வாரமும் மத அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அவர் தனது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்றார். ஆனால் பூஜை, சடங்குகள், ஆரத்தியின் போது கோயிலின் உட்புறப் பகுதிக்குள் நுழைய மறுத்துவிட்டார்.

மத உணர்வால் கோயில் பாதுகாப்புக்கு மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ அதிகாரியின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இன்று, முன்னாள் கிறிஸ்தவ இராணுவ அதிகாரி ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசன் தனது பணிநீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த அதிகாரி தனது பணியிடத்தில் படைப்பிரிவின் மத நடவடிக்கைகளில் பங்கேற்க மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இராணுவம் அவரை பணிநீக்கம் செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிகாரி இராணுவத்திற்கு தகுதியற்றவர் என்று கருதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றம், "இந்த நடத்தை கடுமையான ஒழுக்கமின்மையைக் குறிக்கிறது, இராணுவம் போன்ற ஒரு நிறுவனத்தில் இதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று கூறியது.

இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டுக்கு முந்தையது. ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசன், 3-வது குதிரைப்படை படைப்பிரிவில் லெப்டினன்ட்டாக பணியாற்றினார். பணியில் அவரது பிரிவில் ஒரு கோயில் ஒரு குருத்வாரா இருந்தது. அங்கு ஒவ்வொரு வாரமும் மத அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அவர் தனது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்றார். ஆனால் பூஜை, சடங்குகள், ஆரத்தியின் போது கோயிலின் உட்புறப் பகுதிக்குள் நுழைய மறுத்துவிட்டார்.

தனது கிறிஸ்தவ நம்பிக்கைகளால் இதைத் தடைசெய்ததாகவும், எந்த தெய்வத்தையும் வணங்கச் சொல்வது தவறு என்றும் அவர் கூறினார். ஒரு கமாண்டன்ட் தொடர்ந்து தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இது விவகாரத்தை பெரிதுபடுத்தியதாகவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டினார்.

மறுபுறம், பலமுறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் அவர் படைப்பிரிவு அணிவகுப்பில் முழுமையாக பங்கேற்கவில்லை என்றும், இது தெளிவாக ஒழுக்கமின்மையைக் குறிக்கிறது என்றும் இராணுவம் கூறியது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, அவர் 2022-ல் பணியிலிருந்து நீக்கப்பட்டார். மத அணிவகுப்பில் பங்கேற்காததற்காக 2017 -ல் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சூர்யகாந்த்: இது என்ன மாதிரியான நடத்தை? ஒரு இராணுவ அதிகாரியாக, உங்கள் சொந்த வீரர்களின் மத உணர்வுகளை நீங்கள் மதிக்கத் தவறிவிட்டீர்களா? இது ஒழுக்கமின்மை இல்லையென்றால், என்ன?

மனுதாரரின் வழக்கறிஞர் கோபால் சங்கர்நாராயணன்: ஐயா, எனது கட்சிக்காரர் ஒரு முறை மட்டுமே மறுத்துவிட்டார். அவர் கோயிலின் உள் கருவறைக்குள் நுழையவில்லை. பூஜை, ஆரத்தி செய்வது அவரது நம்பிக்கைக்கு எதிரானது. அவர் வெளியே இருந்தார். ஆனால் உள்ளே சென்று சடங்குகளைச் செய்ய முடியவில்லை.

தலைமை நீதிபதி: உங்களிடம் எந்த பூஜையும் செய்யச் சொல்லப்படவில்லை. நீங்கள் உங்கள் வீரர்களுடன் நின்று கொண்டிருந்தீர்கள். ஆனால், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள விரும்பாத அளவுக்கு உங்கள் மத ஈகோ பெரிதாக உள்ளதா?

நீதிபதி ஜோய்மல்யா பாக்சி: உங்கள் சர்ச் போதகரும் 'சர்வ தர்ம ஸ்தலத்திற்கு' (வழிபாட்டுத் தலம்) செல்வது கிறிஸ்தவத்திற்கு எதிரானது அல்ல என்று கூறினார். பிறகு நீங்கள் ஏன் செல்லவில்லை? உங்கள் தனிப்பட்ட புரிதலை சீருடையுக்கு மேலே வைக்க முடியாது.

வழக்கறிஞர்: மைலார்ட், அது ‘சர்வ தர்ம ஸ்தலம்' அல்ல... கோயில்களும் குருத்வாராக்களும் மட்டுமே இருந்தன. என் கட்சிக்காரர் சில பூஜைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பயந்தார்.

நீதிபதி ஜோய்மல்யா பாக்சி: பிரிவு 25 ஒவ்வொரு உணர்வையும் பாதுகாக்காது. அது அடிப்படை மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாக்கிறது. கிறிஸ்தவத்தில் ஒரு கோவிலுக்குள் நுழைவது எங்கே தடைசெய்யப்பட்டுள்ளது?

வழக்கறிஞர்: 'வேறொரு கடவுளை வணங்க முடியாது. என் கட்சிக்காரர் பூஜை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பயந்தார்.

தலைமை நீதிபதி: இது இந்திய இராணுவம். மதச்சார்பின்மை இங்கே மிக முக்கியமானது. உங்கள் வீரர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கத் தவறிவிட்டீர்கள். அத்தகைய அதிகாரியை உடனடியாக நீக்க வேண்டும்.

வழக்கறிஞர்: ஐயா, குறைந்தபட்சம் தண்டனையைக் குறைக்கவும். இதைத் தவிர, அவரது மீதமுள்ள ராணுவப் பணி ரெக்கார்டுகள் முற்றிலும் சுத்தமாக உள்ளது.

தலைமை நீதிபதி: நீங்கள் நூறு விஷயங்களில் நல்லவராக இருக்கலாம். ஆனால் இந்த தவறு ஒரு பெரிய தவறு. இந்த மெத்தனத்தை ஏற்க முடியாது. ஒழுக்கத்தை சமரசம் செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.