Cholera Death News in Trivandrum : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலியானவரது உறவினர் அல்லது அப்பகுதியில் வேறு ஏதும் காலரா பாதிப்பு ஏற்படவில்லை.

Cholera Death News in Trivandrum : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். கௌடியாரைச் சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அதிகாரி ஒருவர் காலராவுக்கு பலியானார். இறந்த பின்னர் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 20ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவரது உறவினர்களுக்கோ அப்பகுதியிலோ வேறு யாருக்கேனும் காலரா பாதிப்பு ஏற்படவில்லை.

மிகப்பெரிய அவமானம் இது; பஹல்காம் தாக்குதல் குறித்து ட்வீட் போட்ட ஷாருக்கானை வறுத்தெடுத்த பிரபலம்

இதனால் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த 17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு ஓரிரு நாட்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா தனது முதல் காலரா மரணத்தைப் பதிவு செய்கிறது. திருவனந்தபுரத்தின் கௌடியாரைச் சேர்ந்த 63 வயது முதியவர். ஏப்ரல் 20 அன்று காலரா இறப்பு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் காலரா தொடர்பான முதல் மரணம் இதுவாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

மார்பகங்களைத் தொட முயல்வது 'வன்புணர்வு முயற்சி' அல்ல: உயர் நீதிமன்றம்