Asianet News TamilAsianet News Tamil

சிக்கல்கள் இல்லாததால் நீட் அவசர சட்டத்திற்கு அனுமதி - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்!!

central govt argument on in neet in supreme court
central govt argument on in neet in supreme court
Author
First Published Aug 17, 2017, 2:41 PM IST


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் மாதிக்கப்படுவார்கள் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு மதியத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது. 

central govt argument on in neet in supreme court

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது எனவும் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாததால் ஒப்புதல் வழங்கப்பட்டது எனவும் உச்சநீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது. 

மேலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios