காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் தொடர்ச்சியாக, புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2021ஆம் ஆண்டு 13ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட வளாகம் திறக்கப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதையொட்டி பிரதமர் மோடி கூறுகையில், “விஸ்வநாதர் கோயில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் மட்டுமல்ல. இந்தியாவின் சனாதன கலாச்சாரத்தின் சின்னம்; நமது ஆன்மீக ஆன்மாவின் சின்னம்; இது இந்தியாவின் தொன்மை, பாரம்பரியங்கள், இந்தியாவின் ஆற்றல் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் சின்னம்.” என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

காசிக்கான மேம்படுத்தப்பட்ட விஸ்வநாதர் வளாகம் செங்கற்கள் மற்றும் சாந்துகளுக்கு அப்பால் செல்லும் பயணம் இது எனவும், இந்தியாவின் நாகரிக மகிமையின் மறுமலர்ச்சி எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் வலுவான சுற்றுலாத் துறைக்கு மறுவளர்ச்சிக்கு இது எவ்வாறு வழிவகுத்துள்ளது என்பதும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில், 13 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2019 இல் 68 லட்சமாக இருந்தது.

காசியின் புத்தாக்கம் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு எழுச்சியைத் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய மக்களின் வருமானம் 65% உயர்வடைந்துள்ளது. அதே நேரத்தில் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பு மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் 34.18 சதவீதம் உயர்வடைந்துள்ளது.

இந்தி தேசிய மொழி அல்ல: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

வாரணாசியின் ஸ்டார்ட்அப் முன்னேற்றம், உத்தரப் பிரதேச மாநிலத்தை 1 டிரில்லியன் டாலட் பொருளாதாரக் கனவை நோக்கி முன்னேற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் தொழில் முனைவோர் மனப்பான்மை பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது சிறந்த முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.