தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகத்துவம் நாட்டின் முன்னணி தலைவர்களுக்கு தெரியும் என்று சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகத்துவம் நாட்டின் முன்னணி தலைவர்களுக்கு தெரியும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஜயவாடா பொரங்கியில் உள்ள அனுமோலு கார்டனில் நடந்த என்டிஆர் நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். தெலுங்கில் பேசிய அவர், தெலுங்கு பேசி பல நாட்களாகிவிட்டதாகவும், தவறு நடந்தால் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், சந்திரபாபு எனக்கு 30 வருட நண்பர். அவரை மோகன் பாபு அறிமுகப்படுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: சூடானில் இருந்து 366 இந்தியர்கள் பெங்களூர் திரும்பினர்... அதில் 52 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்!!

சந்திரபாபு பெரிய தலைவராக வருவார் என்று மோகன் பாவ் கூறினார். ஐதராபாத் செல்லும்போதெல்லாம் சந்திரபாபுவை சந்திப்பது வழக்கம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே சந்திரபாபுவின் தொலைநோக்கு பார்வை. இந்தியாவில் உள்ள பெரிய அரசியல் தலைவர்களுக்கு சந்திரபாபுவின் மகத்துவம், திறமை என்னவென்று தெரியும். இந்த விஷயம் இங்குள்ளவர்களை விட வெளியில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். 1996-97ல் சந்திரபாபுவால் விஷன் 2020-ஐ வடிவமைத்தபோது, ஐடிக்கு எதிர்காலம் எப்படி இருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: மதிப்புமிக்க இணையதள விருதை வென்றது சத்குருவின் சேவ் சாயில் இயக்கம்!!

அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது வார்த்தைகளை உணர்ந்து ஹைதராபாத்தில் ஹைடெக் நகரம் வந்தது. பில்கேட்ஸ் போன்றவர்கள் ஹைதராபாத் வந்தனர். லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் இன்று வேலை செய்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள சில பகுதிகளைப் பார்க்கும்போது நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது நியூயார்க்கில் இருக்கிறோமா என்று தோன்றுகிறது. ஐதராபாத் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…