ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் நிலநடுக்கம் :

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையும் படிங்க : 'பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது..' குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை.!!