Asianet News TamilAsianet News Tamil

அசத்தல்.. மருத்துவமனைகளுக்கு ரத்தம் எடுத்து செல்ல ட்ரோனை உருவாக்கிய காஷ்மீர் இளைஞர்..

மருத்துவ அவசரத் தேவைகளுக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ட்ரோனை காஷ்மீரை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

Amazing.. Kashmiri youth abaan habib created a drone to carry blood between hospitals..
Author
First Published Jul 20, 2023, 3:00 PM IST

இன்றைய காஷ்மீர் இளைஞர்களின் மனதில் நம்பிக்கையும் மன உறுதியும் நிறைந்துள்ளது. அத்தகைய இளைஞர்களில் ஒருவர் தான் அபான் ஹபீப். மருத்துவ அவசரத் தேவைகளுக்காக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ட்ரோனை அவர் உருவாக்கியுள்ளார்.

பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, ஸ்ரீநகரின் சகுரா பகுதியில் வசிக்கும் அபான் ஹபீப் இந்த ட்ரோனை உருவாக்கி அசத்தி உள்ளார். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும், தொலைதூரப் பகுதிகள் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் திறன் கொண்ட பறக்கும் இயந்திரத்தை அவர் உருவாக்கி உள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஸ்ரீநகர் நகரத்தை மூழ்கடித்த வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் மனித துன்பங்களைப் பார்த்த பிறகு தனது கண்டுபிடிப்பை உருவாக்க உத்வேகம் பெற்றதாக அபான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அபான் , "2014 பேரழிவுகரமான வெள்ளத்தைப் பார்த்த பிறகு, மருத்துவமனைகளுக்கு இடையில் இரத்த மாதிரிகள் மற்றும் பைகளை மாற்றுவதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க விரும்பினேன். இளைஞர்களுக்கு எனது செய்தி உங்கள் ஆர்வத்தை பின்பற்ற வேண்டும் என்பதே. இளம் மனங்களின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே ஒரு சமூகம் உலகில் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வர முடியும்.” என்று தெரிவித்தார்.

அபானின் ட்ரோன் சோதனையானது மாநிலங்களுக்கு இடையேயான இணைப்புக்கு நீட்டிக்கப்பட்டது, சிம்லாவில் உள்ள மருத்துவமனைகளை சண்டிகருடன் இணைக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு முன், அபான் முதலில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆளில்லா விமானத்தை அறிமுகப்படுத்தவும், தரவுகளை சேகரித்து அதன் பலன்களை நிரூபிக்கவும் முடிவு செய்தார்.

அபான் திட்டத்தில் பணியாற்றியது மட்டுமல்லாமல் காஷ்மீருக்கு வெளியே உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் ஒத்துழைத்தார். இந்த ஒத்துழைப்புகள் அதன் ட்ரோன் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தவும் செயல்படுத்தவும் கூடுதல் நிபுணத்துவம் மற்றும் ஆதாரங்களை வழங்கியுள்ளன. இருப்பினும், ட்ரோன் சேவையை வணிக அளவில் இயக்க, தனக்கு நிதி உதவி தேவை என்கிறார்.

அபான் ஹபீப் தனது ட்ரோன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், காஷ்மீரின் இளைஞர்களுக்கு வணிக மற்றும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று நம்புகிறார். அபானின் ட்ரோன் கண்டுபிடிப்பு தொலைதூரப் பகுதிகளில் சுகாதார அணுகலைப் புரட்சிகரமாக்குவதில் பெரும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது. 

தனது இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஹபீப் அபான் வழங்கினார். அப்போது காஷ்மீரில் உள்ள கிரீன் வேலி கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இதுகுறித்து பேசிய அபான் "எங்களிடம் பள்ளியில் டிங்கரிங் ஆய்வகம் உள்ளது, இது செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கும் ட்ரோன்களை உருவாக்கும் கலையைக் கற்றுக்கொள்வதற்கும் எனக்கு மிகவும் உதவியது.

என் பெற்றோர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள், எனவே கல்வி பற்றிய எனது எண்ணம் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. மற்ற பெற்றோர்களைப் போல, எனது குடும்பத்தினர் என்னை மருத்துவர், பொறியாளர் போன்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க வற்புறுத்தவில்லை. நான் விரும்பியபடி செல்ல அனுமதித்தனர். எனது விருப்பம் ட்ரோன் தொழில்நுட்பத்தில் இருந்தது.

சிறுவயதில் இருந்தே காஷ்மீரில் பல இயற்கை சீற்றங்களை நான் பார்த்திருக்கிறேன், அப்படிப்பட்ட ஒரு இயற்கை பேரிடர் 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் வெள்ளத்தில் மூழ்கியபோது ஏற்பட்ட வெள்ளம். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தேவைப்பட்டன, உள்கட்டமைப்புகள் இல்லாததால் அரசு இயந்திரம் எப்படி மோசமாக தோல்வியடைந்தது என்பதைப் பார்த்தோம். அவை மிகவும் குழப்பமான காட்சிகளாக இருந்தன, ஹெலிகாப்டர்களில் இருந்து உதவியை கைவிடும் இந்த முயற்சி போதாது என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்போதுதான் ட்ரோன்களைப் பற்றி யோசித்தேன், அதுபோன்ற சூழ்நிலைகளில் அவை எவ்வளவு உதவியாக இருக்கும். பேரிடர் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தன்னாட்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட சிறிய ட்ரோன்களை உருவாக்கினால், அவை அதிக செலவு இல்லாமல் உதவிகளை வழங்க முடியும்.” என்று தெரிவித்தார்.

JKEDI மற்றும் JKTPO ஆகிய நிறுவனங்கள் தன்னை ஊக்குவித்ததாக கூறிய அபான், தான் இன்னும் அரசாங்கத்திடம் இருந்து எந்த நிதி உதவியையும் பெறவில்லை என்றும் தெரிவித்தார். அபான் ஹபீப் குஜராத்துக்கு டிஆர்டிஓ ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார், அப்போது ராணுவத் தளபதி ஜெனரல் மகுந்த் மேஜர் நரவனேவிடம் தனதுஆளில்லா விமானத்தை காட்டியதாகவும், அவர் தனது முயற்சிகளை பாராட்டியதாகவும் அவர் கூறினார்.

மேலும் “ நிராகரிப்பு அல்லது தோல்வியை எதிர்கொள்ள இளம் தொழில்முனைவோர் தயாராக இருக்க வேண்டும் டன்கள் மற்றும் மானியங்களுக்காக தங்கள் பணத்தை செலவழிக்காதீர்கள், ஏனெனில் கடன்கள் தோல்விகளின் வேர்" என்று தெரிவித்தார்.

அபானின் தந்தை எச்.யு.மாலிக், , ஹிமாச்சலப் பிரதேசத்தில் 25 இடங்களில் தாங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதே மாதிரியை காஷ்மீரிலும் அதன் புவியியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பின்பற்ற விரும்புவதாகவும் கூறினார். 

காஷ்மீரில் இந்த திட்டம் செயல்பட வேண்டும் என்பது தனது மகனின் கனவு என்று மாலிக் கூறுகிறார். “SKIMS மருத்துவமனையை மற்ற மூன்றாம் நிலை, பள்ளத்தாக்கின் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்க விரும்புகிறோம். எங்களுக்கு உதவ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம், இது சம்பந்தமாக அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios