பீதியில் ப.சிதம்பரம் குடும்பம்... அப்பாவுக்கு துணையாக மகனையும் திஹார் சிறைக்கு அனுப்ப பாஜக திட்டம்..!
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்திற்கு வழங்கிய முன்ஜாமீனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்திற்கு வழங்கிய முன்ஜாமீனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி இருவரையும் கைது செய்ய தடை விதித்தது தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.