Asianet News TamilAsianet News Tamil

பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவு.. மௌனம் காக்கும் குடும்பத்தினர்..

பில்கிஸ் பானு வழக்கில் முன் விடுதலை பெற்ற 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

9 of 11 convicts gone missing in Bilkis Bano case Families remain silent Rya
Author
First Published Jan 10, 2024, 10:54 AM IST

பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்ய குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் 2 வாரங்களுக்குள் குற்றவாளிகள் அனைவரும் மீண்டும்  சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த 11 குற்றவாளிகளில் 9 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் ரந்திக்பூர்,  சிங்வாட்.என்ற இரண்டு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ளன. கோத்ரா கலவரத்திற்கு முன்பு பில்கிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரந்திக்பூரில் வசித்து வந்தனர். முந்தைய நாள் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு, பிப்ரவரி 28, 2002 அன்று அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். மார்ச் 3, 2002 அன்று, அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகள் உட்பட குடும்பத்தின் 14 உறுப்பினர்கள் தாஹோட்டின் லிம்கேடா தாலுகாவில் ஒரு கும்பலால் கொல்லப்பட்டனர். 6 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஐதராபாத்: சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.. பயணிகளுக்கு என்ன ஆச்சு? வெளியான பரபரப்பு தகவல்

பில்கிஸ் பானு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு ஜனவரி 21, 2008 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. எனினும் குற்றவாளிகள் அனைவரும் ஆகஸ்ட் 15, 2022 அன்று விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர். இருப்பினும், அவர்களில் ஒன்பது பேர் இப்போது தலைமறைவாகி உள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவரான கோவிந்த்  என்பவரின் (55) தந்தை அகம்பாய் சதுர்பாய் ராவல் (87), இது "காங்கிரஸின் அரசியல் பழிவாங்கல்" என்று குற்றம் சாட்டினார். மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு" கோவிந்த் வீட்டை விட்டு வெளியேறியதாக ராவல் கூறினார், இருப்பினும், கோவிந்த் சனிக்கிழமை (ஜனவரி 6) வீட்டை விட்டு வெளியேறியதாக உள்ளூர் காவலர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ கோவிந்த் அயோத்தியில் உள்ள (ராம்) மந்திர் பிரதிஷ்டானத்தில் சேவை (சேவை) செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒன்றும் செய்யாமல் தினமும் சுற்றித் திரிவதை விட சேவை செய்வது நல்லது. சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மீண்டும் சிறைக்குச் செல்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அவர் சட்டத்திற்குப் புறம்பாக சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பதும் இல்லை. அவர் சட்டத்தின் சரியான செயல்முறையுடன் விடுவிக்கப்பட்டார், இப்போது சட்டம் அவரை திரும்பிச் செல்லும்படி கூறியுள்ளது, எனவே அவர் திரும்பிச் செல்வார் ” என்று கூறினார்.

மற்றொரு குற்றவாளியான ராதேஷ்யாம் ஷா, கடந்த 15 மாதங்களாக வீட்டில் இல்லை என்று கூறிய அவரது தந்தை பகவான்தாஸ் ஷா, "ராதேஷ்யாம் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை... அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்றார்" என்றும் தெரிவித்தார். எனினும் கிராம மக்கள் ராதிஷ்யாம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து குற்றவாளிகளும் ஞாயிற்றுக்கிழமை வரை பொதுவில் காணப்பட்டனர் என்று தெரிவிக்கின்றனர்..

இதனிடையே இரட்டை கிராமங்களில், பெரும்பாலான கடைக்காரர்கள் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையொட்டி, ஒவ்வொரு குற்றவாளிகளின் வீட்டிற்கு வெளியேயும், போலீஸ் பந்தோபஸ்ட்டின் ஒரு பகுதியாக, ஒரு கான்ஸ்டபிள் நிறுத்தப்பட்டுள்ளார்.

பெற்ற மகனை கொன்று சூட்கேசில் கொண்டு சென்ற தாய்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம் - ஏன் இந்த வெறி? வெளியான உண்மை!

கிராமத்தின் சதுக்கத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் காணாமல் போன மற்றொரு குற்றவாளியான பிரதீப் மோடியாவின் (57) வீடு உள்ளது. திங்கள்கிழமை அதிகாலையில் பிரதீப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், அவர் தனது பைக்கை வீட்டிலேயே விட்டு சென்றதால் விரைவில் திரும்பி வருவார் என்றும் அவரது வீட்டிற்கு வெளியே நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

குற்றவாளியான ரமேஷ் சந்தனா (60) பற்றிக் கிராம மக்களிடம் கேட்டபோது, அவர் சிங்வாட்டில் வசிக்கவில்லை என்றும் அவர் கோத்ராவைச் சேர்ந்தவர் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதே போல் மீதமுள்ள குற்றவாளிகள் ராஜூபாய் சோனி, கேஷர்பாய் வோஹானியா, பகபாய் வோஹானியா மற்றும் பிபின்சந்திரா ஜோஷி, அவர்கள் இப்போது வதோதராவைச் சேர்ந்தவர்கள் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios