medical facts

தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது.

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியை சீர் செய்து, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

வாரம் ஒருமுறை கடாயம் ஏதாவது ஒரு கூந்தல் மாஸ்க் போட்டால் நன்றாக கூந்தல் வளரும்.

கூந்தல் மாஸ்க் டிப்ஸ்…

1.. முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் கரு வேண்டாம்.

2. வாழைப் பழத்தை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். கட்டி கட்டியாக இல்லாமல் பாத்துக்கொள்ளுங்கள். அதன் பின் அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து கலக்குங்கள்.

3. இந்த கலவையில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாறை கலக்கவும். உங்கள் கூந்தலுக்கு தகுந்தாற்போல் இன்னும் வேண்டுமென்றால் ஆரஞ்சு சாறை கலந்து கொள்ளுங்கள். நன்ராக பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். 

4. இவற்றில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் பால் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகபப்டியான வறட்சி கூந்தலில் இருந்தால், இன்னும் சிறிது வாழைப் பழத்தை சேர்க்கலாம்.

5. உங்கள் கூந்தலை நன்றாக சிக்கில்லாமல் சீவிக்கொள்ளுங்கள். முக்கியமாக அழுந்த சீவினால் அதிக ரத்த ஓட்டம் பாயும். பின்னர் இந்த மாஸ்க் உபயோகிக்கலாம்.

6. இதனால், உங்கள் கூந்தலின் வேர் வரைச் சென்று நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.