கண் எரிச்சலைப் போக்க எளிய வீட்டு வைத்தியம் இங்கே!
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமமாக பாதிக்கும் ஒன்றுதான் கண் எரிச்சல் தான்.
டிவி, மொபைபோன், கணினி இவற்றி மூலம் கண் எரிச்சல் எளிதில் வந்துவிடும்.
இதை எப்படி எளிய வீட்டு முறை வைத்தியத்தின் மூலம் போக்குவது?
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய், வெங்காய சாறு, புளியமரத்து இலைச் சாறு போன்றவை
செய்முறை
வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் கொள்ளவும்.
செயல்முறை
நன்கு கலந்து வைத்துள்ள அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விடவும்
எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, தலைக்கு குளித்து வாருங்கள். பிறகு உங்கள் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.
கண் எரிச்சல் மட்டுமின்றி கண் வலி, கண் சிவந்து காணப்படுவதும் இதனால் குணமடையும்.
கண்களில் எரிச்சல் குறைந்து, குளிர்ச்சி அடையும். உடல் புத்துணர்ச்சி அடையும்.