இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசி பழத்திற்கு உண்டு.
ஓர் அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை எந்த வித பக்க விளைவுகள் இன்றி கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசி பித்தக் கோளாறுகளையும் விரைந்து குணமாக்கும்.
அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,
அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் சீரணக் கோளாறு, உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
