Asianet News TamilAsianet News Tamil

72 மணி நேரமும் பழங்களை மட்டுமே சாப்பிடுறீங்களா? இந்த பிரச்சினைகள் வரும்.. ஜாக்கிரதை!

பலர் பழங்களை மட்டுமே 72 மணி நேரமும் உணவாக சாப்பிடுகிறார்கள். ஆனால் இது நிச்சயமாக உடலை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

do you know how eating only fruits for 72 hours can affect your health in tamil mks
Author
First Published Nov 21, 2023, 11:54 AM IST

பலர் உடல் எடையைக் குறைக்க பழங்களைத் தேர்வு செய்கிறார்கள். பழங்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பழங்களில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், அவை ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகின்றன. அதனால்தான் சிலர் பழங்களைச் சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பலர் டயட்டில் இருப்பதற்காக 72 மணி நேரமும் உணவாக சாப்பிடுகிறார்கள். ஆனால், இது நிச்சயமாக உடலை பாதிக்கும். பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை:

பழங்கள் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். பழங்கள் அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் சரியான அளவு தண்ணீரை பராமரிக்கவும் பழங்கள் பயனுள்ளதாக இருக்கும். பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. எனவே பலர் உடல் எடையை குறைக்கவும், நச்சுத்தன்மையை குறைக்கவும் பழங்களைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் சிலர் இதற்காக  3 நாட்களுக்கு பழங்கள் மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார்கள்.  ஆனால், மூன்று நாட்களுக்கு பழங்களை மட்டுமே சாப்பிடுவது உடலில் சில நேர்மறை மற்றும் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இதையும் படிங்க:  உடல் எடை டக்குனு குறைய காபியில் இந்த ஒரு பொருள் கலந்து குடியுங்க!

பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற கூறுகள் உடலில் ஆற்றலை அதிகரிக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது; ஆனால் பழங்களை மட்டும் சாப்பிடுவது சில எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:   ஜப்பானியர் தினமும் காலை இதுதான் சாப்பிடுகிறார்களாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க ஸ்லிம் பிட்டாக..!!

72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?

ஊட்டச்சத்து மதிப்பு இல்லாமை: பழங்கள் மட்டுமே உணவைப் பின்பற்றும் நபர்களுக்கு வைட்டமின் பி12, கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கலாம். இது இரத்த சோகை, சோர்வு, நோயெதிர்ப்பு பிரச்சனைகள் மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு நோய் ஆபத்து: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது ப்ரீ டயாபெட்டிஸ் உள்ளவர்கள் இந்த பழங்களை மட்டும் சாப்பிடக் கூடாது. ஏனெனில் பெரும்பாலான பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது. கணையம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைச் சாப்பிடுவதும் சிரமமாக இருக்கும்.

பல் சிதைவு: பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரை பித்தத்துடன் கலந்து பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இது பல் சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எடை அதிகரிக்கும் ஆபத்து: பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை சில நேரங்களில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக பழங்களை அதிகம் சாப்பிடுபவர்கள் இந்த ஆபத்தை உணர்கிறார்கள்.

உடல் வீக்கம்: சில பழங்களில் பிரக்டோஸ் அதிகமாக உள்ளது. அதனால் உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாதங்களில் அல்லது வேறு எந்தப் பகுதியிலும் வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் பழங்களை மட்டும் சாப்பிடக் கூடாது.

இதனால் உணவுப்பழக்கம் சீரானதாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, பழங்களுடன், உணவில் மற்ற ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். இதனால், உடலின் ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios