உங்களுக்குத் தெரியுமா? வீட்டு வைத்தியத்தில் சளியை அரை மணி நேரத்தில் விரட்டலாம்...
சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படிப்பட்ட சளியை விரட்ட வீட்டு வைத்தியத்தில் அரை மணி நேரமே போது,
இதோ தீர்வு...
** மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
** இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
** ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
** நீங்கள் உறங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
அப்புறம் என்ன முயற்சித்து பாருங்களேன்...