இரத்த அழுத்த்தைக் குறைக்கும் இரத்தக்காய்…
இதய கோளாறு ஏற்படுவதை தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர்.
ஆய்வின் முடிவில், காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டின் சாறு எடுத்து ஒரு டம்ளர் குடித்தால் இதயம் சம்பந்தமான கோளாறை கட்டுப்படுத்தலாம் என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதாவது இந்த சாறு குடித்த சில மணிநேரத்தில் ரத்த அழுத்தம் 4 முதல் 5 புள்ளிகள் குறைத்து நிவாரணம் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பீட்ரூட் சாறு உடல் நடலத்திற்கும், உடலின் இரத்த ஓட்டத்திற்கும் பல்வேறு ஆரோக்கியத்தை தரும் என்பதை நம் முன்னோர்கள் அதற்கு செங்கிழங்கு, இரத்தக்காய் என்றெல்லாம் பெயர் வைத்து உண்டுவந்துள்ளனர் என்று தெரியுமா?