- Home
- உலகம்
- Interesting Facts: குற்றங்கள் இல்லை.. கைதிகளுக்கு தட்டுப்பாடு.. சிறைகளை இழுத்து மூடும் நாடு.. ஆச்சரிய உண்மை!
Interesting Facts: குற்றங்கள் இல்லை.. கைதிகளுக்கு தட்டுப்பாடு.. சிறைகளை இழுத்து மூடும் நாடு.. ஆச்சரிய உண்மை!
Netherlands Prisons: இந்தியாவில் சிறைகள் நிரம்பி வழிகின்றன. புது சிறைகளைக் கட்ட வேண்டிய நிலைமை. ஆனால் ஒரு நாட்டில் கைதிகள் இல்லாததால் சிறைகளை மூடி வருகின்றனர். அது எந்த நாடு என்று விரிவாக பார்ப்போம்.

Netherlands Prisons சிறைகளை இழுத்து மூடும் நெதர்லாந்து
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் குற்றங்கள் பெருகி கைதிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் இங்கு சிறைகளை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நெதர்லாந்து நாட்டில் கைதிகளே இல்லாததால் சிறைகளை மூடி வருகிறார்கள். குற்றமே செய்யாத மக்கள் வாழும் அந்த நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நெதர்லாந்தில் குற்றவாளிகள் எண்ணிக்கை குறைந்தது ஏன்?
நெதர்லாந்தில் கொலை, கொள்ளை போன்ற கடுமையான குற்றங்கள் மிக மிகக் குறைவு. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டு அரசு பல சிறைச்சாலைகளை மூடி வருகிறது. இதை கேட்கவே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
சிறைகள் இவ்வளவு காலியாக இருப்பது எப்படி?
சிறைக்குப் பதிலாக எலக்ட்ரானிக் கண்காணிப்பு
நெதர்லாந்து சிறைகள் ஹோட்டல், மறுவாழ்வு மையங்கள்
மூடப்பட்ட சிறைச்சாலைகளை சும்மா விடாமல், வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். சில சிறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களாகவும், மற்றவற்றை பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அகதிகள் தங்கும் மையங்களாகவும் மாற்றிவிட்டனர்.
சிறைகளை மூடுவதால் கோடிக்கணக்கில் சேமிப்பு
சிறைகளை மூடுவதன் மூலம் டச்சு அரசாங்கம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்கிறது. அங்கு ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ₹25,000 செலவாகிறது. மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக இல்லாததால், சிறிய குற்றங்களுக்கு கைது செய்வதில்லை.

