MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை! இந்தியாவை தாக்கவில்லை! பாகிஸ்தான் மறுப்பு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை! இந்தியாவை தாக்கவில்லை! பாகிஸ்தான் மறுப்பு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. 

2 Min read
Author : Rayar r
Published : May 11 2025, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pakistan denies violating ceasefire

Pakistan denies violating ceasefire

பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா களையெடுத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் அப்பாவி மக்களை குறி வைத்தது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் என மாநிலங்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அழுத்தத்தின் பேரில் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. ஆனால் போர் நிறுத்த ஒப்பநதம் மேற்கொள்ளப்பட்ட அடுத்த 3 மணி நேரத்தில் நேற்று இரவு இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் மீது ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. நமது ராணுவம் பாகிஸ்தான் படைக்கு தக்க பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) ஆகியவற்றில் மீண்டும் மீண்டும் எல்லை மீறல்கள் ஏற்பட்டால், அவற்றை வலுவாகக் கையாள ஆயுதப்படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

Related Articles

Related image1
அடேங்கப்பா! ரஃபேல் போர் விமானத்தில் 1 மணி நேரத்துக்கு இவ்வளவு எரிபொருள் செலவாகிறதா?
Related image2
காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயார்! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
34
இந்தியா குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

இந்தியா குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

ஆனால் இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார், ''பாகிஸ்தான்எந்த போர் நிறுத்த மீறல்களையும் செய்யவில்லை''  என்று மறுத்துள்ளார்.

“பாகிஸ்தானால் எந்த போர் நிறுத்த மீறலும் செய்ய முடியாது, அதைப் பற்றி அது யோசிக்கவும் இல்லை. இது கொண்டாட்டத்தின் தருணம், இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்,” என்று ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது அட்டாவுல்லா தரார் கூறியுள்ளார்.  போர் நிறுத்தம் செய்யப்பட்டவுடன், பாகிஸ்தான் அதை மீறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தரார் தெரிவித்தார்.

44
இந்திய எல்லையோர மாநிலங்களை தாக்கியது யார்?

இந்திய எல்லையோர மாநிலங்களை தாக்கியது யார்?

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக நல்லறிவு மேலோங்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியையும் அவர் கடுமையாக சாடினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளதால் எல்லையில் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது யார்? எனற கேள்வி எழுந்துள்ளது. இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று ஒரு சிலரும், தாக்குதல் நடத்தி விட்டு பாகிஸ்தான் பொய் சொல்வதாகவும் வேறு சிலரும் தெரிவித்துள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Recommended image2
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!
Recommended image3
Ebola: காங்கோவில் எபோலா அவசரநிலை! இந்த வைரஸ் ஏன் இவ்வளவு ஆபத்தானது?
Related Stories
Recommended image1
அடேங்கப்பா! ரஃபேல் போர் விமானத்தில் 1 மணி நேரத்துக்கு இவ்வளவு எரிபொருள் செலவாகிறதா?
Recommended image2
காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயார்! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved