MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • அட கொடுமையே! 30 லட்சம் தெரு நாய்களை கொல்லும் மொராக்கோ; ஏன் தெரியுமா?

அட கொடுமையே! 30 லட்சம் தெரு நாய்களை கொல்லும் மொராக்கோ; ஏன் தெரியுமா?

30 லட்சம் தெரு நாய்களை கொல்ல மொராக்கோ அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2 Min read
Author : Rayar r
Published : Jan 16 2025, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Morocco Goverment

Morocco Goverment

மொராக்கோவின் கொடூர செயல் 

பிஃபா 2030 (FIFA 2030 உலகக் கோப்பை கால்பந்து தொடரை மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. உலகக் கோப்பை கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்த நாடு செய்து வரும் ஒரு செயல் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்பாக நகரங்களை சுத்தம் செய்யும் வகையில் சுமார் 30 லட்சம் தெருநாய்களைக் கொல்ல மொராக்கோ அர்சு திட்டமிட்டுள்ளது.  அங்கு இப்போதே பல ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

அதாவது நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்படுவதாகவும், சுடப்படுவதாகவும், மின்சாரம் பாய்ச்சி கொல்லப்படுவதாகவும் வலிமிகுந்த சாதனங்களைப் பயன்படுத்தி பிடித்து பின்பு குடோனுக்கு சென்று கொடூரமாக கொல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Stray Dogs Killed

Stray Dogs Killed

 ஃபிஃபா வேடிக்கை பார்க்கிறது

அங்கு நாய்கள் கொடூரமாக கொல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள விலங்கு நலக் குழுக்களும், ஆர்வலர்களும் மொராக்கோ அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2024ம் ஆண்டில் மொராக்கோ அதிகாரிகள் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டதாக உறுதியளித்த போதிலும், இந்த படுகொலை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி ( IAWPC) குற்றம்சாட்டியுள்ளது.

மொராக்கோவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் ஜேன் குடால், ஃபிஃபாவின் பொதுச் செயலாளர் மத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோமுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ''மொராக்கோவில் தெரு நாய்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களில் பலர் விலங்கு பிரியர்கள்.

அவர்கள் இந்த மிருகத்தனத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப்போய் உள்ளனர். ஆனால் இந்த கொடூரமான காட்டுமிராண்டித்தனமான செயலை  ஃபிஃபா வேடிக்கை பார்க்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன'' என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல்‍-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? அடுத்து என்ன நடக்கும்?

34
Stray Dogs Killed in Morocco

Stray Dogs Killed in Morocco

விலங்குநல ஆர்வலர்கள் எதிர்ப்பு

மொராக்கோ நாய்களை கொல்வது தொடர்ந்தால், அந்த நாடு கால்பந்து போட்டியை நடத்த வேண்டுமா? என்பதை பிஃபா யோசிக்க வேண்டும் என்றும் ஜேன் குடால் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மொராக்கோவில் தெரு விலங்குகளைக் கொல்வதைத் தடைசெய்யும் சட்டம் உள்ளது. 2022 நீதிமன்றத் தீர்ப்பில் நாய்களைக் கொல்வதைத் திட்டமிட்டதற்காக ஒரு மாகாண ஆளுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆனால் பிஃபா 2030 கால்பந்து உலகக்கோப்பையை மொராக்கோ நடத்தும் என்ற அறிவிப்பு வந்த பிறகு இந்த சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று விலங்குநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.உள்ளூர் போலீசார் கண்டும் காணாமல் இருப்பதால் அதிகாரிகள் நாய்கள் மீது கொடூர செயலை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. 

44
Stray Dogs

Stray Dogs

குழந்தைகள் முன்னிலையில்...

மொராக்கோவில் ஆண்டுதோறும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் முன்னிலையில் 3,00,000 வரை தெருநாய்கள் கொல்லப்படுவதாக IAWPC கூறியுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசி, கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் அடைப்பது என எத்தனையோ மனிதாபிமான அணுகுமுறைகள் உள்ளன. 

மற்ற நாடுகள் தெருநாய்களைக் கட்டுப்படுத்த இந்த செயலை செய்து வருகின்றன. ஆனால் மொராக்கோ அதிகாரிகள் மிருகத்தனமாக நாய்களை கொன்று குவித்து வருகின்றனர் எனவும் விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மொராக்கோவின் நடவடிக்கைகளுக்கு எதிராக FIFA ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்குகிறதா? பரபரப்பை பற்ற வைத்த கார்ட்டூன்! உண்மை என்ன?

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Price Cut: பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைப்பு.. அதிரடியாக அறிவித்த அரசு.. மக்களுக்கு நிம்மதி!
Recommended image2
Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Recommended image3
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved