MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பேக்கை தூக்கிட்டு புறப்பட்ட மருமகள்; கண்மூடித்தனமாக நம்பிய மாமனார், மாமியார் – தவிக்கும் மகன்!

பேக்கை தூக்கிட்டு புறப்பட்ட மருமகள்; கண்மூடித்தனமாக நம்பிய மாமனார், மாமியார் – தவிக்கும் மகன்!

Thangamayil Plan against Saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கண்மூடித்தனமாக மருமகளை நம்பியதால் சரவணனின் வாழ்க்கை தான் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

3 Min read
Rsiva kumar
Published : Oct 30 2025, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Image Credit : Jio Hotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு வழியாக காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடியாக முடிந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே பாண்டியனின் கடையில் வேலை பார்க்கும் அவரது சம்பந்தி மாணிக்கம் ரூ.500 ஆட்டைய போட்ட நிலையில் இப்போது மீண்டும் 2ஆவது முறையாக கொஞ்சம் முன்னேறி ரூ.1100ஐ ஆட்டைய போட்டுள்ளார். அவர் யாருமே பார்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் சரவணன் பார்த்துவிட்டார். ஆனால், அப்போதே தனது மாமனாரிடம் அவர் கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை.

27
அப்பா மீது பழி போடாதீங்க
Image Credit : Jio Hotstar

அப்பா மீது பழி போடாதீங்க

மாறாக, தங்கமயிலிடம் கேட்டார். தனது அப்பா அப்படியெல்லாம் கிடையாது, திருட்டு பழி போடாதீங்க, அப்படி இப்படி என்று டிராமா போட்டார். அப்போது பாண்டியன் வரவே அதோடு அந்த டாபிக் முடிந்தது. ஆனால், வீட்டில் வரவு செலவு கணக்கு பார்க்கும் போது ரூ.1100 குறைவது தெரிந்துவிட்டது. எப்போதும் அரசி தான் கணக்கு வழக்கு பார்ப்பார். ஆனால், அவருடன் இருந்த தங்கமயில் நான் கணக்கு பார்க்கிறேன் என்று கேட்டார். ஆனால், அரசி கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாண்டியனின் சந்தேகம் முழுவதும் பழனிவேல் பக்கம் திரும்பியது.

37
பழனிவேல் மீது திருட்டு பழி
Image Credit : Jio HotStar

பழனிவேல் மீது திருட்டு பழி

அவன் தான் எடுத்திருப்பான் என்று கூறி பழனிவேலுவை அழ வைத்துவிட்டார். அப்போதும் கூட தங்கமயில் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோபில் எல்லாமே தெரிந்தும் தங்கமயில் அமைதியாக இருந்த நிலையில், சரவணன் தனது ஆத்திரத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரிடம் கேட்டு சண்டையிட்டார். அப்போதும் கூட தங்கமயில் தன்னுடைய அப்பா பணத்தை எடுக்கவில்லை, வீணா பழி போடாதீங்க அப்படி இப்படி என்று டிராமா போட்டார். பிறகு சரவணன் சண்டையிட்டு அங்கிருந்து சென்ற நிலையில் உடனே தங்கமயில் தனது அப்பாவிற்கு போன் போடவே அவரது அம்மா பாக்கியம் தான் போனை எடுத்தார்.

47
அப்பாவிற்கு போன் போட்ட தங்கமயில்
Image Credit : Jio HotStar

அப்பாவிற்கு போன் போட்ட தங்கமயில்

ஏன், அம்மா அப்பா இப்படி பண்ணுகிறார். கடையிலிருந்து பணம் எடுத்திருக்கிறார். இதற்கு தான் நான் கடைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன் என்று ஆரம்பிக்க, அப்படி பணம் எடுத்தாரா? என்னிடம் சொல்லவே இல்ல பாரு, இரு நான் கேட்கிறேன். அடுத்தமுறை திருட்டை கூட தெரியாமல் பண்ண சொல்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரவணன் அங்கு வர தங்கமயில் வசமாக மாட்டிக் கொண்டார். உடனே போனை கட் செய்ய, சரவணன் உடம்பு முழுவதும் பொய். ஓ குடும்பமாக சேர்ந்து திருடுறீங்களா என்று கேட்டார். சரி, இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. காலையில் முதல் வேலையாக என்னுடைய அப்பா, அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லிவிடுகிறேன் என்றார்.

57
சரவணனை போட்டுக் கொடுத்த தங்கமயில்
Image Credit : Jio HotStar

சரவணனை போட்டுக் கொடுத்த தங்கமயில்

ஆனால், சரவணன் சொல்வதற்குள்ளாக தங்கமயில் அப்படியே உள்டாவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். இதனால், பாண்டியன் மற்றும் கோமதி இருவருக்கும் ஆத்திரமும், கோபமும் வந்தது. ஏன், சரவணன் இப்படி இருக்கான் என்று இருவரும் பேசிக் கொண்ட நிலையில் உடனே சரவணனை அழைத்து வார்னிங் கொடுத்தனர். குழந்தை விஷயத்தில் யாரும் பொய் சொல்ல மாட்டாங்க, நீ ஏண்டா சந்தேகப்படுற என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், தங்கமயில் சொன்னதில் துளி கூட உண்மையில்லை என்று சரவணனுக்கு தெரிந்தும் தனது அப்பா அம்மாவிடம் உண்மையை சொல்ல முடியாமல் சரவணன் திணறிய நிலையை பொய்யை கூட உண்மை மாதிரி சொல்லி மாமனார் மற்றும் மாமியாரை ஏமாற்றியுள்ளார்.

67
கண்ணீர் விட்டு அழுத தங்கமயில்
Image Credit : Jio HotStar

கண்ணீர் விட்டு அழுத தங்கமயில்

தனது வீட்டிற்கு புறப்பட்டு செல்வதாகவும், இனிமேல் இங்கு வரப்போவதில்லை என்றும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அவரது அழுகையை பார்த்து தனது மகன் தான் தவறு செய்துவிட்டான் என்று கூறி அவனை திட்டிதீர்த்தனர். என்னதான் இருந்தாலும் அவன் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கவில்லை. இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் முழு உண்மையையும் சொல்லாமல் பாதியை மட்டுமே சொல்ல அந்த பாதியும் உண்மையும், பொய்யும் கலந்து சொல்லியுள்ளார்.

77
சரவணனை திட்டி தீர்த்த பாண்டியன்
Image Credit : Jio HotStar

சரவணனை திட்டி தீர்த்த பாண்டியன்

பின்னர் சரவணனை திட்டி சரிக்கட்டி பேக்கை வாங்கி உள்ள செல்ல சொல்ல அவரும் அப்பாவின் பேச்சுக்கு மறுப்பேச்சு இல்லாமல் பேக்கை வாங்கி தனது ரூமுக்குள் சென்றார். அங்கு சென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது போன்ற மருமகள்கள் வீட்டிற்கு வீடு இருக்கத்தான் செய்கிறார்களோ என்னவோ…

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved