மனைவிக்கிட்டயே உண்மைக்காக போராடும் சரவணன் – குடும்பத்தில் பொய் சொல்லி நாடகம்!
Thangamayil in Distress : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் உண்மையை வெளிக்கொண்டு வர சரவணன் புதிய நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நாளுக்கு நாள் சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எம் காம் படித்துள்ளதாக பொய் சொல்லி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். அதோடு, தங்கமயில் வீட்டில் போட்டுவிட்ட நகை அனைத்தும் கவரிங். இதுல தங்கமயில் சர்வர் வேலை பார்ப்பது சரவணனுக்கு தெரிந்துவிட்டது.
தங்கமயில் ஆதார் கார்டு
இதைத் தொடர்ந்து இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத சரவணன், தங்கமயிலை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். அப்போது தான் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக கூறி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார். கொஞ்ச நாட்கள் அந்த டாபிக் சென்றது. ஒரு கட்டத்தில் தங்கமயில் கர்ப்பமாக இல்லை என்று தெரிந்து சரவணன் கோபம் அடைந்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதார் கார்டு
அதன் பிறகு அவரை விட்டு பிரிந்தார். வீட்டிற்குள் எல்லோர் முன்னிலையிலும் கணவன் மனைவி தான். ஆனால், அவர்கள் இருவரும் தனித்தனியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து தங்கமயிலின் அப்பா பாண்டியனின் கடையில் வேலை பார்க்க, தங்கமயிலும் கடைக்கு வேலைக்கு வந்தார். முதல் நாளில் ரூ.500 பணத்தை எடுத்த மாணிக்கம், அடுத்த நாள் ரூ.1100ஐ ஆட்டைய போட்டார். கடைசியாக தீபாவளி பண்டிகைக்கு மகளுக்கு சீர் செய்ய வேண்டும் என்று ரூ.10,000 பணத்தை எடுத்துக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
ரூ.1100 பணம் எடுப்பதை பார்த்த சரவணன், தங்கமயிலிடம் கேட்டு சட்டையிட்டார். இச்சம்பவம் குறித்து தங்கமயில் தனது மாமனார், மாமியாரிடம் உள்டாவாக சொல்லி தப்பு செய்தது எல்லாம் சரவணன் என்று அவரை கை காட்டிவிட்டார். இப்போது தங்கமயிலே தனது வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்ற சந்தேகம் சரவணனுக்கு தோன்றியது. தான் 2010ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக சொல்லி மாட்டிக் கொண்டார். இதையெல்லாம் சரவணன் கேட்க தங்கமயில் மீது சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தங்கமயிலிடம் ஆதார் கார்டு கேட்டார். ஆனால், அவர் கடைசி வரை எடுத்துக் கொடுக்கவே இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இந்த நிலையில் தான் எல்லோரிடமும் மக்கள் தொகை கணக்கெடுப்பதாகவும், அதற்காக எல்லோருடைய ஆதார் கார்டும் கேட்கிறார்கள் என்றும் சரவணன் தனது குடும்பத்தாரிடம் கேட்டார். சரவணன் கேட்டதைத் தொடர்ந்து வீட்டிலுள்ள அனைவரும் எடுத்துக் கொடுக்க, மீனா, ராஜீ ஆகியோர் மொபைலில் அனுப்பி வைப்பதாக கூறினார்கள். கடைசியாக தங்கமயிலிடம் கேட்க, அவர் மீண்டும் மலுப்ப ஆரம்பித்தார். கடைசி வரை கொடுக்கவே இல்லை. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது.