- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss Common Man : நைட்டியால் வெடித்த சர்ச்சை... பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவர்களை அலறவிட்ட பெண்...!
Bigg Boss Common Man : நைட்டியால் வெடித்த சர்ச்சை... பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவர்களை அலறவிட்ட பெண்...!
Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிரியவர்ஷினி என்பவர் நைட்டி அணிந்து வந்து கலந்துகொண்டது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நைட்டியுடன் வந்த பிரியவர்ஷினி
பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், பிரியவர்ஷினியின் செயல்பாடுகள் மற்றும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நைட்டி அணிந்து அவர் ஆடிஷனுக்கு வந்தது தொடங்கி, மற்ற போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் வரை பல சம்பவங்கள் கவனம் பெற்றுள்ளன.
ஆடிஷன் மேடைக்கு பிரியவர்ஷினி நைட்டி அணிந்து வந்தபோது, அவரது உடை குறித்து தொகுப்பாளர் ராஜு கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த பிரியவர்ஷினி, தான் போலியாக நடிக்க விரும்பவில்லை என்றும், இயல்பாகவே எப்படி இருக்கிறேனோ அப்படியே தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த உடையில் வந்ததாகவும் கூறுகிறார்.
இதையடுத்து, மாயா உள்ளிட்டோர் நைட்டி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உடை என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும், தன்னைப் பிடித்தவர்கள் பாராட்டலாம், பிடிக்காதவர்கள் விமர்சிக்கலாம் என்றும் பிரியவர்ஷினி தன்னம்பிக்கையுடன் பதிலளிக்கிறார்.
“உடையை மாற்ற முடியாது” என திட்டவட்டம்
நைட்டியை மாற்றிவிட்டு வருமாறு கூறப்பட்டபோதும், அதற்கு பிரியவர்ஷினி மறுப்பு தெரிவிக்கிறார். தன்னைத் தேர்வு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை நடுவர்களே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் உடையை மாற்றுவதற்காக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கிடையே, கமலி என்ற மற்றொரு போட்டியாளர் சில முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியதால் சூழல் மேலும் பரபரப்பானது. நைட்டி அணிவது தொடர்பாக பிரியவர்ஷினி தன்னிடம் வேறு விதமாக பேசியதாகவும், தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக அவர் கூறியிருந்ததாகவும் கமலி தெரிவித்ததாக நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது.
“அட்டென்ஷன் தேடுகிறீர்களா?” என கேள்வி
பிரியவர்ஷினியின் செயல்பாடு குறித்து மாயா, அவர் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு செய்கிறாரா என்ற கேள்வியை முன்வைக்கிறார். மேலும், இதுபோன்ற அணுகுமுறை வேறு மொழி நிகழ்ச்சியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாகவும், அதையே பின்பற்றுவது போல இருப்பதாகவும் அவர் விமர்சிக்கிறார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டபோதும், பிரியவர்ஷினியின் அணுகுமுறை குறித்து மீண்டும் விவாதம் எழுகிறது.
நடுவர்களிடமும் நேரடி கேள்வி
தொடர்ந்து நடந்த விவாதத்தில், தன்னை மதிக்காதவர்களுக்கு ஏன் டாஸ்க் வழங்க வேண்டும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதனால் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையேயான சூழல் மேலும் சூடுபிடித்தது.
ஒரு கட்டத்தில், தன்னைப் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவிப்பவர்களிடம் பிரியவர்ஷினியும் நேரடியாக கேள்வி எழுப்புகிறார். அவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கப் போவதில்லை என்ற வகையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்த பிரியவர்ஷினி
ஆடிஷனின் மற்றொரு பகுதியில், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சில கடினமான சூழ்நிலைகள் குறித்தும் பிரியவர்ஷினி பகிர்ந்துகொள்கிறார். குடும்ப சூழல், சமூக வலைதளத்தில் கிடைத்த புதிய கவனம் மற்றும் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தபோதான தனது மனநிலை உள்ளிட்ட விஷயங்களை அவர் பேசியதாக நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான இழப்பு குறித்தும் அவர் உருக்கமாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு ஒரு புதிய வாய்ப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்துகிறார்.
“மெண்டல் ஹெல்த் முக்கியம்” – மாயா கொடுத்த கருத்து
ஆடிஷன் முடிவில் மாயா, பிரியவர்ஷினியின் மனநிலை மற்றும் அவர் சந்தித்துள்ள தனிப்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு சில ஆலோசனைகளை வழங்குகிறார். கடினமான அனுபவங்களுக்குப் பிறகு உடனடியாக பிக் பாஸ் போன்ற அழுத்தம் நிறைந்த சூழலுக்குள் செல்வது அவருக்கு மேலும் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.
இதற்கு பிரியவர்ஷினி, தன்னால் வலிமையாக இருக்க முடியும் என்றும், இந்த வாய்ப்பை எதிர்கொள்ளும் திறன் தனக்கு இருப்பதாகவும் பதிலளிக்கிறார். இறுதியில், அவரை தேர்வு செய்யவில்லை என்ற முடிவு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் நடுவர்களின் அணுகுமுறை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும், தனது மனநலம் குறித்து நடுவர்கள் பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னைப் பற்றி முன்கூட்டியே ஒரு முடிவுடன் அவர்கள் பேசியதாகவும் பிரியவர்ஷினி குற்றம் சாட்டுகிறார். பிரியவர்ஷினியின் இந்த ஆடிஷன் பகுதி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

