MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Raji Final Decision : கதிர் மீதான காதல்; குடும்பத்தின் மீதான அன்பு – அப்பா வீட்டிற்கு செல்ல மறுத்த ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Raji Final Decision : கதிர் மீதான காதல்; குடும்பத்தின் மீதான அன்பு – அப்பா வீட்டிற்கு செல்ல மறுத்த ராஜீ – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Pandian Stores 2 Serial Today 556th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ராஜீ தனது அப்பா வந்து அழைத்தும் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Aug 11 2025, 07:40 PM IST| Updated : Aug 11 2025, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Image Credit : Asianet News

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Pandian Stores 2 Serial Today 556th Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாக கதிர் நீ வேண்டுமென்றால் உங்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டுமானால் செல்லலாம் என்று கூறியிருந்தார். இதே போன்று வடிவு மற்றும் முத்துவேல் இருவரும் தங்களது மகள் ராஜீயை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்திருந்தனர். அப்போதே தெரியும், இப்படியெல்லாம் ஒரு எபிசோடு வரும் என்று, அதன்படியே இன்றைய 556ஆவது எபிசோடு நடந்துள்ளது.

25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
Image Credit : Asianet News

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமாரவேல் வீட்டிற்கு வந்த அரசி எல்லா உண்மைகளையும் சொன்ன பிறகு பாண்டியன் தனது மகள் அரசியை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். மேலும் குமாரவேல் பற்றியும் போலீஸில் புகார் கொடுக்க அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நகை மேட்டரில் தனது கணவர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்காக ராஜீ தனது கடந்த கால வாழ்க்கை பற்றி தெளிவாக குறிப்பிட்டார்.

35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
Image Credit : Asianet News

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு

அதில், தான் கண்ணன் என்பவனை காதலித்து திருச்செந்தூர் வரை சென்ற பிறகு அவன் நகை மற்றும் பணத்திற்காக தன்னை காதலித்து ஏமாற்றியதாக குறிப்பிட்டார். அப்போது அங்கு வந்திருந்த கதிர் தன்னையும், நமது குடும்ப மானத்தையும் காப்பாற்றவே பிடிக்காமலிருந்த போதும் கூட தன்னை திருமணம் செய்து கொண்டான் என்றார்

இதன் காரணமாக ஒரு முடிவுக்கு வந்த வடிவு, அரசி எப்படி அவரது அப்பா வீட்டிற்கு சென்றாரோ அதே போன்று ராஜீயை நமது வீட்டிற்கு அழைத்து வருவோம் என்று தனது கணவரிடம் கூறுகிறார். மேலும், கதிரும் அதற்கேற்ப பேசுகிறார். அதாவது, உனக்கு விருப்பம் இருந்தால் இப்போதே உன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு செல்லலால் என்றார்.

45
பாண்டியன் ஸ்டோர்ஸ் நியூ எபிசோடு
Image Credit : Instagram/pandianstoresfan

பாண்டியன் ஸ்டோர்ஸ் நியூ எபிசோடு

இந்த நிலையில் தான் ராஜீயை வீட்டிற்கு கூட்டி செல்ல வடிவு மற்றும் முத்துவேல் இருவரும் வீட்டு வாசலில் வந்து ராஜீயை அழைத்தனர். வந்ததும், அவர்கள் வா, நம் வீட்டிற்கு செல்லலாம். பிடிக்காத வாழ்க்கை வாழ வேண்டாம். என்னதான் திருச்செந்தூரில் தாலி கட்டி கோயிலில் பதிவு செய்திருந்தாலும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று முத்துவேல் பேசினார்.

55
ராஜீ மற்றும் கதிர் காதல் காட்சிகள்
Image Credit : Instagram/pandianstoresfan

ராஜீ மற்றும் கதிர் காதல் காட்சிகள்

ஆனால், வடிவு தனது மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தார். நான் என்னுடைய மகளிடம் பேசுகிறேன். இடையில் வேறு யாரும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதற்கு பதிலளித்த ராஜீ, நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன். கதிர் மட்டுமின்றி இந்த குடும்பத்தினரும் என்னை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். அத்தையையும், மாமாவையும் விட்டு விட்டு என்னால் வர முடியாது. கதிரும் எனக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்கிறார். அதனால், என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம். இத் தான் என்னுடைய வீடு. நான், இங்கேயே இருந்து கொள்கிறேன். வெளியில் என்னை பார்த்தால் என்னுடன் பேசுங்கள். அரசிக்கும், எனக்கும் திருமணம் நடந்த சம்பவம் எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு எல்லா மாறியது என்று கூறி வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
சினிமா
தொலைக்காட்சி
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved