- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தவறான முடிவெடுத்த மயில்.! மீனாவுக்கு தெரிய வரும் அதிர்ச்சி உண்மை.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
தவறான முடிவெடுத்த மயில்.! மீனாவுக்கு தெரிய வரும் அதிர்ச்சி உண்மை.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2. இந்த தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். தற்போது சரவணன் மயிலிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். செந்தில் மீனா இருவரும் தனிக் குடித்தனம் செல்கின்றனர். கதிர் மற்றும் ராஜி இருவரும் தங்கள் வீட்டில் நடப்பது பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சரவணன் - தங்கமயில் விவாகரத்து
தற்போது கதையின் மையப்புள்ளியாக சரவணன் மற்றும் தங்கமயில் விவாகரத்து விவகாரம் உள்ளது. விவாகரத்து கோரி சரவணன் உறுதியாக இருக்கும் நிலையில், தங்கமயில் நீதிமன்றத்தில் புகுந்த வீட்டில் அனைவரும் கொடுமைப்படுத்தியதாகவும், இருப்பினும் சரவணனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறுகிறார். தங்கமயிலின் இந்த பொய்யான குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், இனி சரவணன் தங்கமயிலை சேரவே விடக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.
மீண்டும் துளிர்க்கும் அஞ்சலி சரவணன் காதல்!
மறுபுறம் சரவணன் வாழ்வில் அவரது முன்னாள் காதலி அஞ்சலி மீண்டும் நுழைந்துள்ளார். அஞ்சலிக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆகியுள்ள நிலையில் சரவணனிடம் அஞ்சலி மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருகின்றனர். நாம் அப்போதே திருமணம் செய்து இருக்கலாம் என்று அஞ்சலி கூற, தான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்து சரவணன் வருத்தப்படுகிறார். மேலும் சரவணனுக்கு தங்கமயில் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தங்கமயிலுக்கு ஏற்படும் சங்கடம்
இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் தங்க மயிலின் தாயார் அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார். அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறும், ‘எங்காவது சென்று செத்து தொலை’ என்று கடுமையான வார்த்தைகளை கூறுகிறார். இதனால் மனமுடைந்த தங்கமயில் நேராக சரவணனைத் தேடி செல்கிறார். ஆனால் சரவணனும், தங்க மயிலை திட்டி அனுப்பி விடுகிறார். “எதை பேசுவதாக இருந்தாலும் கோர்ட்டில் வந்து பேசு, இனிமேல் நீ என் வாழ்க்கையிலேயே வந்து விடாதே” என்று சொல்லி சரவணன் அவரை அனுப்பி விடுகிறார்.
தவறான முடிவெடுக்கும் தங்க மயில்
இதனால் மனமுடையும் தங்கமயில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்காக முடிவெடுக்கிறார். அவர் அழுது கொண்டே செல்வதை பார்த்து விடும் மீனா, அவரை பின்தொடர்ந்து செல்கிறார். மீனா தங்கமயிலை காப்பாற்றுவாரா அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.

