- Home
- Cinema
- தொலைக்காட்சி
- நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேல் கல்யாணத்தில் விருப்பமே இல்லாமல் இருப்பதை அறிந்த அவரின் பாட்டி பெண் வீட்டாரிடம் பேசி கல்யாணத்தை நிறுத்தி இருக்கிறார்.

Pandian Stores 2 Serial
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேல் வீட்டின் வாசலில் சோகமாக நின்று கொண்டிருக்க, அவனிடம் வந்து பேசும் பாட்டி, சாப்பிடாம இருக்கனு உங்க அம்மா புலம்பிகிட்டே இருக்கா, நீ ஏண்டா இங்க வந்து நின்னுட்டு இருக்க, போயி சாப்பிடு நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன் என சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறார் காந்திமதி. நடந்தா போறீங்க நான் வேண்டுமானால் உங்களை பைக்கில் வந்து டிராப் பண்ணட்டுமா என குமரவேல் கேட்க, அதெல்லாம் வேண்டாம் டா பக்கத்துல தான் இருக்கு கோவில், நான் நடந்தே போயிக்கிறேன் என சொல்லிவிட்டு காந்திமதி கிளம்பிச் செல்கிறார்.
பெண் வீட்டாரிடம் பேசும் காந்திமதி
கோவிலுக்கு காந்திமதி தனியாக வந்திருப்பதை பார்த்த பூசாரி, என்னம்மா நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க, கூட யாரும் வரலயா என கேட்க, அதற்கு அவர் நாளைக்கு என்னோட பேரனுக்கு நிச்சயதார்த்தம், வீட்ல அதற்கான வேலைகள் போயிட்டு இருக்கு அதான் யாரும் வரல என சொல்கிறார். கோவிலுக்கு பெண் வீட்டாரை வரச்சொல்லி இருந்த காந்திமதி, அவர்களிடம், நீங்களும் காலகாலத்துல உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறீங்க, நல்ல விஷயம் தான். ஆனால் நீங்க பொண்ணு கொடுக்கும் முன்னர் மாப்பிள்ளையை பத்தி வெளிய விசாரிச்சீங்களா என கேட்கிறார்.
குமாரின் முதல் திருமணத்தை பற்றி சொன்ன காந்திமதி
அதற்கு அவர்கள், விசாரிச்சோம் எல்லாருமே நல்ல விதமா தான் சொன்னாங்க என கூறுகிறார்கள். நீங்க விசாரிச்சதுல, யாருமே குமாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை உங்ககிட்ட சொல்லலயா என காந்திமதி கேட்க, அவர்கள் ஷாக் ஆகிறார்கள். என்னோட மகள் கோமதியின் பொண்ணு அரசியும், குமாரும் காதலிச்சாங்க, அது அவங்க ஃபேமிலிக்கு புடிக்காம அரசிக்கு வேறொரு பையனுடன் திருமண ஏற்பாடுகளை செய்தார்கள். ஆனால் அந்த கல்யாணத்தில் அரசிக்கு விருப்பம் இல்லாததால், அவர் கல்யாணத்துக்கு முதல் நாள் குமரவேல் உடன் ஓடிப்போயிட்டா. அதுமட்டுமில்லாம குமார் அவ கழுத்துல தாலியும் கட்டிட்டான்.
கல்யாணத்தை நிறுத்தும் காந்திமதி
அதன்பின்னர் அரசி கொஞ்ச நாள் எங்க வீட்ல தான் இருந்தா, பிறகு ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை வந்திருச்சு. அதுக்கப்புறம் அவ அவங்க வீட்டுக்கே போயிட்டா. குமார் இன்னும் அந்த பொண்ணு அரசியை தான் நினைச்சிட்டு இருக்கான். இந்த நிலைமையில உங்க பொண்ணுக்கும் குமாருக்கும் கல்யாணம் நடந்தா நல்லா இருக்காதுல்ல, அதான் உங்ககிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த முடிவெடுத்தேன். உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும், அவ நல்லபடியா வாழணும்னு ஆசைப்பட்டீங்கனா தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் காந்திமதி.
டபுள் சந்தோஷத்தில் தங்கமயில்
மறுபுறம் மீனாவின் தோழி வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ள தங்கமயில், எல்லா வேலைகளையும் நீட்டாக செய்து நல்ல பெயர் வாங்குகிறார். மீனாவின் தோழி வேகமாக வீட்டுக்கு வர என்னாச்சு என தங்கமயில் விசாரிக்கிறார். அப்போது சமையல்கார பெண் வேலையில் இருந்து திடீரென நின்றதை பற்றி கூறுகிறார். உடனே மயில், நானே இனி சமையல் வேலையும் பார்க்கிறேன் என சொல்ல, அதற்கு மீனாவின் தோழி, அப்போ அதற்கும் சேர்ந்து மொத்தம் 17 ஆயிரம் சம்பளமாக வாங்கிக்கோ என கூறுகிறார். இவ்வளவு சம்பளம் கிடைப்பதை நினைத்து சந்தோஷப்படும் மயில், இந்த தகவலை மீனாவிடம் போன் போட்டு சொல்லி உற்சாகமடைகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

