MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தோழியை பார்க்க முதல் முறையாக வீட்டை விட்டு சென்ற அரசி – குமரவேலுவுடன் பேச வாய்ப்பு; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

தோழியை பார்க்க முதல் முறையாக வீட்டை விட்டு சென்ற அரசி – குமரவேலுவுடன் பேச வாய்ப்பு; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Kumaravel and Arasi will Meet : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் முதல் முறையாக அரசி வீட்டை விட்டு சென்ற நிலையில் குமரவேலுவுட பேச வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

2 Min read
Rsiva kumar
Published : Sep 01 2025, 11:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : hotstar.com/in/shows/pandian-stores-2

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பாண்டியன் குடும்பத்தை பழிதீர்க்க அரசியை காதலித்த குமரவேல் பற்றி அரசிக்கு தெரியவர அவரிடமிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அரசிக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமண நிச்சயதார்த்தமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து திரும்ண ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில், திருமணத்திற்கு முந்தைய நாள் அரசியை தனியாக சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குமரவேல் சுகன்யாவிடம் சொல்லி அனுப்பினார்.

27
Image Credit : hotstar.com/in/shows/pandian-stores-2

அவரது பேச்சைக் கேட்ட அரசி அவருடன் சென்றார். ஆனால், குமரவேல் அவரை கடத்திச் சென்றுவிட்டார். இதன் காரணமாக அரசியின் திருமணம் நின்றது. இந்த நிலையில் தான் அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேல் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அரசி மற்றும் குமரவேல் இடையில் அடிக்கடி சண்டை வர ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்த குமரவேல் திட்டம் போட்டார். இதற்காக குமரவேல் வேறொரு பெண்ணிடம் பழகுவது போன்று ஆக்டிங் செய்தார்.

37
Image Credit : hotstar.com/in/shows/pandian-stores-2

இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் குமரவேலுவிற்கு சண்டை வர அரசி தனக்கு உண்மையில் திருமணம் நடக்கவில்லை என்ற உண்மையை சொல்ல பிறகு பாண்டியன் வந்து அரசியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து தன்னை காதலிப்பது போன்று ஏமாற்றி கடத்தி சென்றதாக அரசி குமரவேல் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.

47
Image Credit : JioHotstar/Screenshot

அதன் பிறகு அவருக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது போன்று மனம் திருந்தி வாழ தொடங்கினார். அரசியின் நினைவுகள் அவரை வாட்டி வதைக்க மனம் திருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்க எண்ணினார். மேலும், அரசியை தனியாக சந்தித்து அவரிடம் அரசிக்கிட்ட மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொன்னார். இந்த நிலையில் தான் மாரி தனது மகன் குமரவேல் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அரசியிடம் கூறிய நிலையில் ராஜீ அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டார்.

57
Image Credit : Jio Hotsar/ Screen Shot

இதைத் தொடர்ந்து முத்துவேல் குமரவேலுவிற்கு பெண் பார்த்து நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று குமரவேல் கூறிய நிலையில் இதை பற்றி சுகன்யா அரசியிடம் கூறினார். ஆனால், மீனா மற்றும் ராஜீ இதை பற்றி ஏன் அவரிடம் சொல்கிறீர்கள்? உங்களால் தான் இவ்வளவு பிரச்சனை. அப்படியிருக்கும் போது இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டனர்.

67
Image Credit : Jio Hot Star/Screen Shot

இந்த சூழலில் தான் குமரவேலுவிற்கு மீண்டும் அரசி மீது காதல் வரவே உண்மையில் அவரை திருமணம் செய்ய மனதில் நினைத்துள்ளார். அரசியும் குமரவேல் மீது காதல் வயப்படும் நிலையில் அல்லது இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் உண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

77
Image Credit : Instagram

இனி வரும் காலங்களில் குமரவேல் மற்றும் அரசி தொடர்பான காட்சிகள் இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் திருமணத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு வந்த அரசி முதல் முறையாக தனது தோழியை பார்க்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். இது குமரவேலுவிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியிடம் பேச ஆசைப்படும் குமரவேலு நித வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved