MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மாமியாரை காப்பாற்றிய கார்த்திக் – தன்னைப் பற்றிய உண்மையை சொல்ல ஷாக்கான சாமுண்டீஸ்வரி!

மாமியாரை காப்பாற்றிய கார்த்திக் – தன்னைப் பற்றிய உண்மையை சொல்ல ஷாக்கான சாமுண்டீஸ்வரி!

Karthik saves his mother in law in Karthigai Deepam 2 : தனக்கு நேர இருந்த ஆபத்தில் சிக்க இருந்த தனது மாமியார் சாமுண்டீஸ்வரியை பட்டாசு விபத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக கார்த்திக் காப்பாற்றியுள்ளார்.

3 Min read
Rsiva kumar
Published : Oct 30 2025, 08:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஜீ தமிழ் கார்த்திகை தீபம் 2
Image Credit : Zee Tamil You Tube

ஜீ தமிழ் கார்த்திகை தீபம் 2

கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு இப்போது ஒருவர் மீது ஒருவர் அன்பு கடந்த காதல் வயப்பட்டு ரொமான்ஸ் செய்து வருகின்றனர். திருமணம் நடந்து கிட்டத்தட்ட 3, 4 மாதங்களுக்கு பிறகு இப்போது கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
தீபாவளி கொண்டாட்டம்
Image Credit : Zee Tamil You Tube

தீபாவளி கொண்டாட்டம்

கார்த்திகை தீபம் 2 சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான காட்சிகளை வைத்து கார்த்திகை தீபம் 2 இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் சுவாதி, அதன் பிறகு ரேவதி, பின்னர் துர்கா என்று ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். அவர்களை எல்லாம் கார்த்திக் காப்பாற்றினார்.

இந்த நிலையில் தான் இப்போது கார்த்திக்கை தீர்த்து கட்ட காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல், சந்திரகலா என்று ஒவ்வொருவரும் பிளான் போட்டனர். எத்தனை முறை பிளாஅன் போட்டாலும் கார்த்திக்கை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதலில் சாமுண்டீஸ்வரி, அதன் பிறகு ரேவதி, அடுத்து நவீன் என்று ஒவ்வொருத்தருக்கும் எதிராக காளியம்மாள் அண்ட் கோ பிளான் போட்டு வரும் நிலையில் அதையெல்லாம் முறியடித்து கார்த்திக் அவர்களை காப்பாற்றி வருகிறார்.

37
மாப்பிள்ளை பட்டாசு
Image Credit : Zee Tamil You Tube

மாப்பிள்ளை பட்டாசு

காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் குற்ற செயல்களுக்காக ஜெயிலுக்கு சென்றாலும் அவர்கள் இல்லாமல் கதை இல்லை என்பதற்காக எப்படியோ ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்துவிடுகின்றனர். இந்த நிலையில் தான் இப்போது கார்த்திக்கை சாய்க்க முயற்சி செய்துள்ளனர். இதற்கான வாய்ப்பாக குடும்பத்தில் ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் தல தீபாவளி கொண்டாடினர். இதற்காக சாமுண்டீஸ்வரி மாப்பிள்ளைக்காக பட்டாசு வாங்கிக் கொண்டு வந்தார். இதில் மாபிள்ளை பட்டாசு என்று சொல்லக் கூடிய பட்டாசை கார்த்திக் தான் வெடிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

47
ஒன்று சேர்ந்த கார்த்திக் அண்ட் ரேவதி
Image Credit : Zee Tamil

ஒன்று சேர்ந்த கார்த்திக் அண்ட் ரேவதி

காளியம்மா திட்டப்படி புதிதாக ஒரு மாப்பிள்ளை பட்டாசு வாங்கி வந்து அதில் உள்ள மருந்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக நாட்டு வெடி குண்டு மருந்தை சிவனாண்டி வைத்துவிட்டார். மேலும், அந்த நாட்டு வெடி குண்டு வைத்த மாப்பிள்ளை பட்டாசை சந்திரகலாவின் உதவியுடன் முத்துவேல் சாமுண்டீஸ்வரியின் வீட்டில் வைத்துவிட்டு, பதிலுக்கு சாமுண்டீஸ்வரி வாங்கி வந்த பட்டாசை எடுத்துக் கொண்டு திரும்ப வந்துவிட்டார்.

அப்போது முத்துவேல் தனது அடையாளமாக தன்னை அறியாமல் தனது செயினை அங்கு தவறவிட்டுவிட்டார். இதுவரையில் அந்த செயின் யாருடைய கண்ணிலும் படவில்லை. இந்த நிலையில் தான் ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் ஒன்று சேர்ந்த பிறகு அந்த பட்டாசை தீபாவளிக்கு முந்தைய நாள் வெடிக்க ரேவதி ஆசைப்பட்டார்.

57
கார்த்திக் அண்ட் ரேவதி
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திக் அண்ட் ரேவதி

கார்த்திக்கும் பட்டாசு வெடிக்க தயாரான போது சாமுண்டிஸ்வரி எல்லோரது முன்னிலையிலும் வெடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார். அதன்படியே ரேவதியும் அப்செட்டாக சென்றார். இந்த நிலையில் தான் தீபாவளி நாள் வந்தது. அனைவரும் புதிய உடை அணிந்து கொண்டு வந்தனர். இதில் மாமனார் வீட்டு சம்பிரதாயமாக பழம், பணம் வைத்து முதலில் மயில்வாகனம் மற்றும் ரோகிணி இருவரும் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சாமுண்டீஸ்வரியும் சரி, ராஜராஜனும் சரி நல்லா இருக்க என்று மட்டும் சொல்லிவிட்டனர்.

இதே போன்று ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் காலில் விழுந்து ஆசி பெற்று அந்த தாம்பூல தட்டை பெற்றுக் கொண்டனர். அப்போது நீங்கள் நீண்ட ஆயுளுடன் எந்தவித நோய், நொடியுமின்றி மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஆசி வழங்கினர். இதன் மூலமாக ரேவதிக்கோ அல்லது கார்த்திக்கிற்கோ ஏதோ நடக்க போகிறது என்று தெரிகிறது.

67
கார்த்திகை தீபம் 2 சீரியல்
Image Credit : Zee Tamil

கார்த்திகை தீபம் 2 சீரியல்

இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு பட்டாசு வெடிக்க தயாரானார்கள். இதில் அனைவரும் பட்டாசு போட்டு வெடித்த பிறகு கார்த்திக் அந்த மாப்பிள்ளை வெடியை வெடிக்க தயாரானார். ஆனால், அவர் பற்ற வைப்பதற்கு முன்னதாக சந்திரகலா போன் வருகிறது என்று சொல்லி கொஞ்ச தூரம் நகர்ந்து சென்றார்.

இந்த நிலையில் கார்த்திக் பற்ற வைக்கும் போது ரேவதிக்கு குண்டடி பட்ட இடத்தில் வலி ஏற்படவே கார்த்திக் உடனே ரேவதியை வீட்டிற்குள் அழைத்து சென்றார். அப்போது செயின் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், அந்த போட்டோ முத்துவேல் உடையது என்று தெரிந்து கொண்டு சாமுண்டீஸ்வரியை பட்டாசு வெடிப்பதிலிருந்து காப்பாற்றினார். ஏனென்றால் கார்த்திக்கிற்கு பதிலாக அவர் தான் பட்டாசு வெடிப்பதாக இருந்தது.

77
கார்த்திகை தீபம் 2
Image Credit : You Tube Zee Tamil Screen Shot

கார்த்திகை தீபம் 2

அதன் பின்னர் அந்த பட்டாசை அப்படியே கொண்டு சென்று சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டார். அவர்கள் மீது பட்டாசு வெடிக்க சட்டை வேஷ்டியெல்லாம் நார் நாராக கிழிந்து முகம் முழுவதுமாக கருப்பாக மாறியது. இதனால் சந்திரகாலா தான் அதிர்ச்சி அடைந்தார். இறுதியாக கார்த்திக் தன்னைப் பற்றிய உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்வது போன்றும், இதையெல்லாம் கேட்டு சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், உண்மையில் கார்த்திக் தன்னைப் பற்றிய உண்மைகளை சொல்லிவிட்டாரா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved