MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட்ட ரூபஸ்ரீ.. கார்த்தியின் மாஸ்டர் பிளானில் சிக்கியது யார்? கார்த்திகை தீபம் சீரியல்

அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட்ட ரூபஸ்ரீ.. கார்த்தியின் மாஸ்டர் பிளானில் சிக்கியது யார்? கார்த்திகை தீபம் சீரியல்

ஜீ தமிழில் கார்த்திக், அர்த்திகா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Nov 21 2023, 06:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam

Karthigai deepam

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரூபஸ்ரீயை சிக்க வைத்து பல்லவியை கண்டுபிடிக்க பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் இளையராஜாவிடம் எப்படியாவது ரூபாஸ்ரீயை பாட்டு பாட ஒப்பு கொள்ள வைக்க வேண்டும் என்று சொல்லி அவளை சந்திக்க முகவரி கொடுத்து அனுப்புகிறான், அடுத்து ரூபாஸ்ரீ வீட்டிற்கு வரும் இளையராஜா இந்த நிகழ்ச்சி குறித்து சொல்ல கோகிலா அவங்க அம்மா ராஜஸ்ரீ கிட்ட கேட்டு தான் முடிவை சொல்ல முடியும் என தனியாக சென்று தீபாவுக்கு போன் போடுகிறாள். 

24
Karthigai deepam serial

Karthigai deepam serial

இங்கே இளையராஜா கார்த்திக்கு போன் செய்து அவங்க யார்கிட்டயோ கேட்டு தான் சொல்ல முடியும்னு சொல்றாங்க என்று நடந்தவற்றை சொல்கிறான். தீபா, கார்த்தி பக்கத்தில் இருந்ததால் கோகிலாவின் போனை எடுக்க முடியாமல் போகிறது, இந்த சமயத்தில் இந்த கச்சேரியில் பாடினால் சம்பளம் 10 லட்சம் ருபாய் என்று கேட்க, கோகிலா பண ஆசையில் இதுக்கு ஓகே சொல்லி ரூபாஸ்ரீயை அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட வைத்து விடுகிறாள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
zee tamil Karthigai deepam serial

zee tamil Karthigai deepam serial

பணமும் வாங்கிட்டு அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டுட்டு பாட வரலைனா பெரிய பிரச்னையாகிடும் என வார்னிங் கொடுத்து விட்டு இளையாராஜா கிளம்பியதும் தீபா கோகிலாவுக்கு போன் செய்து இதெல்லாம் கார்த்தியின் பிளான் என்று சொல்கிறாள். ஆனால் கோகிலா அதை நம்ப மறுக்கிறாள். அதே சமயம் நீ இந்த கச்சேரியில் பாடியே ஆக வேண்டும் எனவும் ஷாக் கொடுக்கிறாள். 

44
Karthigai deepam today episode

Karthigai deepam today episode

இதனால் தீபா கார்த்தியிடம் தம்பியை பார்க்க ஊருக்கு போயிட்டு வருவதாக சொல்ல அவன் நானும் வரேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... விக்ரம், சந்தானத்தை காலி பண்ண ரெட் ஜெயண்ட் உதவியுடன் களமிறங்கிய யோகிபாபுவின் ‘குய்கோ’ - டிரைலர் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved