MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்கிய புது பிசினஸை அடியோடு தீர்த்துக் கட்ட அன்புக்கரசியை ஏவிவிட்டுள்ளார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 12 2025, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : Youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, தன்னுடைய அக்காக்கள் நந்தினி மற்றும் ரேணுகா உடன் சேர்ந்து தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் உணவக பிசினஸை தொடங்குவதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில், அதற்கான லைசன்ஸ் வாங்கும் பணிகளின் போது, வீட்டுக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம், இந்த வீடு ஆதி குணசேகரனுடையது என்றும், நாளை அவர் வந்து வழக்கு தொடர்ந்தால் உங்க வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்று கூறியதால், அந்த அதிகாரி குழப்பமடைந்து, லைசன்ஸ் வழங்கும் பணிகளை நிறுத்திவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
பிசினஸுக்கு லைசன்ஸ் வாங்கிய ஜனனி
Image Credit : Youtube/suntv

பிசினஸுக்கு லைசன்ஸ் வாங்கிய ஜனனி

பின்னர் இந்த விஷயத்தை சுமூகமாக முடிக்க, பணம் செலவாகும் என கேள்விப்பட்டதும், அதை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் ஜனனி முழித்துக் கொண்டிருக்க, விசாலாட்சி தன்னிடம் இருந்த 70 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுக்கிறார். இதையடுத்து இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து லைசன்சையும் வாங்கி விடுகிறார் ஜனனி. இந்த விஷயம் தெரிந்த அறிவுக்கரசி, ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு, ஜனனி காசு கொடுத்து எல்லா வேலையையும் முடித்துவிட்டதாக கூறுகிறார். இதனால் அப்செட் ஆகும் ஆதி குணசேகரன், தன்னுடைய அடுத்த பிளானை சொல்வதாக போனை கட்பண்ணி விடுகிறார்.

Related Articles

Related image1
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
34
சோசியல் மீடியாவில் குதித்த சிங்கப்பெண்கள்
Image Credit : Youtube/suntv

சோசியல் மீடியாவில் குதித்த சிங்கப்பெண்கள்

பின்னர் வீட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தனித்தனியாக சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் ஓபன் செய்து கொடுக்கும் தர்ஷினி, அதில் தினசரி பதிவுகளை போடுவதன் மூலம் நம்முடைய பிசினஸ் வளர்ச்சியடையும் என கூறுகிறார். இந்த விஷயம் கரிகாலன் மூலம் ஆதி குணசேகரனுக்கு தெரிய வருகிறது. சோசியல் மீடியாவில் நம்முடைய குடும்ப கெளரவம், வீட்டு மானம், மரியாதை எல்லாம் ஸ்டோரியாக போய்கிட்டு இருக்கு என சொல்கிறார். இப்படி ஜனனியின் நடவடிக்கையால் டென்ஷன் ஆகும் ஆதி குணசேகரன், இதற்கு முடிவுகட்ட முடிவெடுத்து அறிவுக்கரசிக்கு போன் போடுகிறார்.

44
ஆதி குணசேகரனின் அதிரடி
Image Credit : Youtube/suntv

ஆதி குணசேகரனின் அதிரடி

லைசன்ஸ் கிடைத்தாலும் வண்டி இருந்தால் தானே பிசினஸ் தொடங்க முடியும் எனக் கூறி அந்த வண்டியை இரவோடு இரவாக கொளுத்திவிடுமாறு கூறுகிறார் குணசேகரன். அவரின் பேச்சைக் கேட்டு முல்லை அந்த வண்டியை தீ வைத்து எரிக்கிறார். தங்கள் வாழ்வாதாரத்தில் ஆதி குணசேகரன் கைவைத்திருப்பதால், அவரை பழிவாங்க ஆயத்தமாகிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது? ஆதி குணசேகரன் மீது அதிரடி ஆக்‌ஷனில் இறங்குவாரா ஜனனி? குணசேகரனுக்கு தூதுவிடும் அறிவுக்கரசியை வீட்டை விட்டு துரத்துவார்களா? என்பதை எல்லாம் இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
Recommended image2
வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
Recommended image3
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
Related Stories
Recommended image1
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved