MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை; வீட்டை விட்டு வெளியேறிய பரணி! 'அண்ணா' சீரியல் அப்டேட்!

Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை; வீட்டை விட்டு வெளியேறிய பரணி! 'அண்ணா' சீரியல் அப்டேட்!

வெங்கடேஷ், ரத்னாவுக்கு எதிராக போட்ட சதி வேலை அம்பலம் ஆன நிலையில் இன்று சண்முகம் சொன்ன வார்த்தையால், பரணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுபற்றி பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 05 2025, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கிய குடும்ப சீரியல் தான் 'அண்ணா'.  நேற்றைய எபிசோடில், ரத்னா மிகவும் கோவமாக தன்னுடைய இந்த நிலைக்கு காரணம், பரணி என்று கூறிய நிலையில் என்று நடந்தேறிய பரபரப்பான காட்சிகள் குறித்து பார்க்கலாம்.

26
பரணி மீது பழி சொல்லும் ரத்னா:

பரணி மீது பழி சொல்லும் ரத்னா:

பரணி, வெங்கடேஷை கூட்டி வந்தது தான் இன்று நான் அசிங்கப்பட்டு நிற்க காரணம் என ரத்னா கூற பரணி எதுவும் பேச முடியாமல் வருத்தத்தோடு தன்னுடைய ரூம்முக்கு செல்கிறார். இதை தொடர்ந்து எல்லோரும் சாப்பிட உட்காருகிறார்கள். அப்போது பரணியை கூப்பிட, மனசு சரி இல்லாமல் போனதால் பரணி சாப்பாடு வேண்டாம் என கூறுகிறாள்.

Anna Serial: சிக்கிய வெங்கடேஷ்; பரணி மேல் விழுந்த பழி! அண்ணா சீரியல் அப்டேட்!

36
சாப்பிட பிடிக்காமல் எழுந்து செல்லும் சண்முகம்

சாப்பிட பிடிக்காமல் எழுந்து செல்லும் சண்முகம்

அவளை விட்டுவிட்டு சாப்பிடம் மனமில்லாமல், மற்றவர்களும் எழுந்து செல்கிறார்கள். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும், சண்முகத்துக்கு ரத்னா சாப்பாடு போடுகிறாள். அப்போது இரண்டு தட்டு அவள் வைக்க, இன்னொரு தட்டு யாருக்கு என சண்முகம் கேட்க இன்னும் பரணி சாப்பிடவில்லை என்கிற தகவலை கூறுகிறாள்.

46
பயணியிடம் ரத்னா வாழ்க்கை பற்றி வாய் விட்ட சண்முகம்

பயணியிடம் ரத்னா வாழ்க்கை பற்றி வாய் விட்ட சண்முகம்

சாப்பாட்டில் கை வைத்த ஷண்முகம், பின்னர் தனக்கும் சாப்பாடு வேண்டாம் என எழுந்து ரூமுக்குள் செல்கிறான். அங்கு அமர்ந்திருந்த பயணியிடம், ஏன் இப்போ சாப்பிடாம இருக்க என பரணியை பார்த்து கேட்க, அவள் வேண்டாம் என கூறுகிறார். பின்னர் பேச்சு வாக்கில்... எல்லோரும் வேண்டான்னு தடுத்தும் அந்த வெங்கடேசனை நீ தானே இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்த என சண்முகம் சொல்லிக்காட்ட இது பரணியை மேலும் பாதிக்கிறது.

Anna Serial: ரத்னா கழுத்தில் கத்தியை வைத்த வெங்கடேஷ்; பரபரப்பான காட்சிகளுடன் 'அண்ணா சீரியல்' அப்டேட்!

56
பரணியை மனதை புரிந்து கொள்ளாத குடும்பத்தினர்:

பரணியை மனதை புரிந்து கொள்ளாத குடும்பத்தினர்:

உடனே பரணி முத்துபாண்டியையும் நான் தான் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன், இன்னைக்கு அவனும் இசக்கியும் நல்லா வாழலையா? அதே மாதிரி ரத்னா வாழ்க்கையும் நல்லா இருக்கனும்னு நினைச்சு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். இது உங்க யாருக்குமே புரியல என ஆதங்கத்தை கொட்டுகிறாள். அதே போல் ஏற்கனவே ஒருமுறை, இனி என்னால் தான் உன் தங்கை வாழ்க்கை வீணாகி விட்டது என சொன்னால் இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என பரணி சொன்ன நிலையில், மீண்டும் சண்முகம் இப்படி பேசியதால் வீட்டை விட்டு செல்ல தயாராகிறாள்.

66
சௌந்தர பாண்டி வீட்டு கிளம்பிய பரணி:

சௌந்தர பாண்டி வீட்டு கிளம்பிய பரணி:

தன்னுடைய பெட்டி மற்றும் துணிமணிகளை எடுத்து கொண்டு, பரணி செல்ல நினைக்கும் நிலையில்... வீட்டுல் உள்ள அனைவரும் தடுத்தும் கூட அவள் வீட்டை விட்டு வெளியேறி சௌந்தர பாண்டி வீட்டுக்கு செல்கிறாள். இந்த நிலையில், பரணி எடுக்கப்போகும் முடிவு என்ன? சௌந்தர பாண்டி தான் இந்த பிரச்சனைக்கு சூத்திரதாரி என்பது தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Recommended image3
ஜனனியிடம் சண்டை போடும் சக்தி... குணசேகரன் பிளானில் திடீர் ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved