MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Anna serial: சிக்கிய வெங்கடேஷ்; கொலைவெறியில் சண்முகம்! 'அண்ணா' சீரியல் அப்டேட்!

Anna serial: சிக்கிய வெங்கடேஷ்; கொலைவெறியில் சண்முகம்! 'அண்ணா' சீரியல் அப்டேட்!

Zee Tamil Anna Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா தங்கைகள் பாச பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலின் இன்று வெங்கடேஷ் கொத்தாக சிக்கியநிலையில், என்ன நடக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.  

2 Min read
manimegalai a
Published : Feb 28 2025, 01:29 PM IST| Updated : Feb 28 2025, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Anna Serial Update: ''அண்ணா' சீரியல் நேற்றைய எபிசோடில் பரணிக்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து செல்கிறார். இந்நிலையில் இன்று அண்ணா சீரியலில் நடைபெற உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

 

25
முருகனிடம் வேண்டிக்கொண்ட சண்முகம்

முருகனிடம் வேண்டிக்கொண்ட சண்முகம்

ரத்னா விஷயத்தில் மனம் நொந்து போன சண்முகம், கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். முருகா நான் எப்படியாவது என் தங்கச்சி மேல இருக்குற களங்கத்தை போக்கணும்.. யார் இப்படி அவளை அசிங்கப்படுத்துனாங்க அப்படினு எனக்கு தெரியணும் என, உருகி உருகி வேண்டிக்கொள்ள... மற்றொருபுறம் பரணி வெங்கடேஷ் மீது சந்தேகம் வந்து அவனை பின் தொடர்கிறார். 

ரத்னா விஷயத்தில் சண்முகம் போட்ட சபதம்; தப்பிக்க வெங்கடேஷ் செய்த தில்லு முல்லு - அண்ணா சீரியல் அப்டேட்!

35
வெங்கடேஷ் செய்த சதி

வெங்கடேஷ் செய்த சதி

முகமூடி அணிந்து கொண்டு, முகத்தை மூடியபடி சரக்கு வாங்கிய வெங்கடேஷ் அந்த டீ கடையில் வேலை செய்த வடமாநில இளைஞரை சந்திக்கிறான். இதன் மூலம் இது வெங்கடேஷ் செய்த சதி வேலை என்பதை புரிந்து கொண்ட  பரணி இதுபற்றி உடனடியாக, சண்முகம் மற்றும் முத்துபாண்டியிடம் கூறி வெங்கடேஷை பிடித்தே ஆகவேண்டும் என சொல்கிறாள்.

45
இசைக்கியிடம் பரணி சொன்ன விஷயம்

இசைக்கியிடம் பரணி சொன்ன விஷயம்

பரணிக்கு உண்மை தெரிந்த விஷயம் எதுவும், வெங்கடேஷுக்கு தெரியாததால் சாதாரணமாக வீட்டிற்கு சென்று விடுகிறான். மேலும் இசக்கிக்கு போன் செய்து, வெங்கடேஷை வெளியே விடாதீங்க என்று பரணி அலர்ட் பண்ண, வெங்கடேஷ் வெளியில் ஏதாவது சென்றாலும் அதை சண்முகத்தின் தங்கைகள் தடுப்பதில் கவனமாக இருக்கின்றனர்.

55
கொலைவெறியில் சண்முகம்

கொலைவெறியில் சண்முகம்

இந்நிலையில் இவர்களின் நடத்தை வெங்கடேஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு விஷயத்தில் சிக்கிவிட்டோம் என்பதை உணர்ந்த வெங்கடேஷ் எப்படியும் வீட்டை விட்டு தப்பிவிட வேண்டும் என நினைக்கிறான். இன்னொருபுறம், வெங்கடேஷ் மீது கொலை வெறியில் இருக்கும் சண்முகம் மற்றும் முத்து பாண்டி வேகவேகமாக வீட்டுக்கு வரும் நிலையில், என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Anna Serial : அசிங்கப்பட்டு நிற்கும் ரத்னா! அதிர்ச்சியின் உச்சத்தில் ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved