MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Serial Actress: சீரியல் நடிகைக்கு போலீசாரால் நடந்த மோசமான சம்பவம்; ஓடும் ட்ரைனில் என்ன நடந்தது?

Serial Actress: சீரியல் நடிகைக்கு போலீசாரால் நடந்த மோசமான சம்பவம்; ஓடும் ட்ரைனில் என்ன நடந்தது?

சென்னையை சேர்ந்த, சின்னத்திரை நடிகை ரேணுகா என்பவரிடம் போலீசே கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Feb 25 2025, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சின்னத்திரை சீரியல் நடிகை ரேணுகா

சின்னத்திரை சீரியல் நடிகை ரேணுகா

சமீப காலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக, சின்னத்திரை நடிகைகள் பற்றிய தகவல்களும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வரும் ரேணுகா என்பவர், கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

25
மைசூரில் இருந்து சென்னை வந்த நடிகைக்கு நடந்த சம்பவம்

மைசூரில் இருந்து சென்னை வந்த நடிகைக்கு நடந்த சம்பவம்

ரேணுகா மைசூரில் இருந்து சென்னைக்கு, காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடத்துள்ளது. ]இந்த ரயில் ஆவடி அருகே வந்தபோது, நடிகை ரேணுகா கை பையில் சில நகைகள் வைத்திருப்பதை நோட்டமிட்டுள்ளார் நபர், எப்படியும் அந்த கைப்பையை அவரிடம் இருந்து பறிக்க முடிவு செய்துள்ளார்.
 

35
நகை இருந்த கை பையை திருடிக்கொண்டு ஓடிய போலீஸ்:

நகை இருந்த கை பையை திருடிக்கொண்டு ஓடிய போலீஸ்:

நாசுக்காக ரேணுகா நகைகளை வைத்திருந்த பையை திருடிக் கொண்டு, செல்லும்போது நடிகையின் கண்ணில் சிக்கி உள்ளார். இதை கவனித்த நடிகை சத்தம் போட்டபடி அந்த பையை தன்னிடம் கொடுக்கும்படி கேட்ட நிலையில், அந்த நபர் நகைகள் இருந்த கைப்பையை தூக்கி வெளியே வீசி உள்ளார். அந்த ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அந்த நபர் தப்பிக்காத வண்ணம் அவரை பிடித்த நிலையில்,  நடிகை உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு, அபாய சக்கலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார்.
 

45
திருட்டு போன கை பை

திருட்டு போன கை பை

பின்னர் ரயில்வே அதிகாரிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்த காரணத்தை கேட்ட போது, தன்னுடைய நகை வைத்திருந்த கைப்பையை இந்த நபர் திருடி விட்டதாக கூறி அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்ததோடு கீழே இறங்கி சென்று, நகைகள் இருந்த பையையும் எடுத்து வந்துள்ளார்.
 

55
கைவரிசை காட்டிய போலீஸ்

கைவரிசை காட்டிய போலீஸ்

பின்னரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வாலாஜாவை  வசந்தகுமார் என்பது தெரியவந்ததும்.  இவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved