- Home
- டெக்னாலஜி
- 4100 கோடியா? நம்பவே முடியல.. இந்தியர்களை வறுத்தெடுத்த ஸ்பேம் கால்கள் - ட்ரூகாலர் பகீர் ரிப்போர்ட்!
4100 கோடியா? நம்பவே முடியல.. இந்தியர்களை வறுத்தெடுத்த ஸ்பேம் கால்கள் - ட்ரூகாலர் பகீர் ரிப்போர்ட்!
Truecaller 2025-ல் இந்தியர்களுக்கு 4100 கோடி ஸ்பேம் அழைப்புகள் வந்ததாக ட்ரூகாலர் அறிக்கை. வங்கி மோசடி, AI வாய்ஸ் ஸ்கேம் குறித்து எச்சரிக்கை. முழு விவரம் உள்ளே.

Truecaller
உங்கள் போனுக்கு அடிக்கடி தேவையற்ற அழைப்புகள் (Spam Calls) வருகிறதா? நீங்கள் மட்டும் தனியாக இல்லை. ட்ரூகாலர் (Truecaller) நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் மொத்தம் 4,168 கோடி ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணிக்கையில் மிரள வைக்கும் மோசடிகள்
ட்ரூகாலரின் 'இந்தியா இன்சைட்ஸ் அறிக்கை 2025' (India Insights Report 2025) படி, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துள்ளன. 2025-ல் மட்டும் 4,168 கோடி ஸ்பேம் அழைப்புகள் வந்துள்ளன. இதில் 1,189 கோடி அழைப்புகளை ட்ரூகாலர் செயலி தானாகவே தடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியர்களின் பொன்னான நேரம் தினமும் சுமார் 21.7 லட்சம் மணிநேரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
குறுஞ்செய்திகளிலும் தொல்லை
அழைப்புகள் மட்டுமல்ல, குறுஞ்செய்திகளிலும் (SMS) ஸ்பேம் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியர்கள் மொத்தம் 12,903 கோடி ஸ்பேம் குறுஞ்செய்திகளைப் பெற்றுள்ளனர். மக்கள் தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளைப் புறக்கணிப்பதால், மோசடி கும்பல்கள் இப்போது எஸ்எம்எஸ் (SMS) பக்கம் திரும்பியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
770 கோடி மோசடி அழைப்புகள் அடையாளம்
மொத்த ஸ்பேம் அழைப்புகளில், சுமார் 770 கோடி அழைப்புகள் மோசடி (Fraud) நோக்கத்துடன் செய்யப்பட்டவை என ட்ரூகாலர் கண்டறிந்துள்ளது. வங்கி அதிகாரிகள், அரசு ஊழியர்கள், அல்லது கேஒய்சி (KYC) புதுப்பிப்பு என்ற பெயரில் வரும் இந்த அழைப்புகள் மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.
2026-ல் காத்திருக்கும் புதிய ஆபத்து
வரும் ஆண்டுகளில் மோசடிகள் இன்னும் நவீனமாக மாறும் என ட்ரூகாலர் எச்சரித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குடும்ப உறுப்பினர்களின் குரலைப் போலியாக உருவாக்கி ஏமாற்றுவது (AI Voice Scam), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) மூலம் மோசடி செய்வது போன்றவை 2026-ல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

