MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பெற்றோர்களே உஷார்.. குழந்தையின் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம்

பெற்றோர்களே உஷார்.. குழந்தையின் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம்

சாட் ஜிபிடி போன்ற AI கருவிகள் குழந்தைகளுக்கு தற்கொலை மற்றும் போதைப்பொருள் பழக்கம் போன்ற ஆபத்தான ஆலோசனைகளை வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Raghupati R
Published : Aug 10 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சாட் ஜிபிடி குழந்தைகள் ஆபத்து
Image Credit : Google

சாட் ஜிபிடி குழந்தைகள் ஆபத்து

செயற்கை நுண்ணறிவு (AI) ஆன ஏஐ பற்றித்தான் எங்கும் பேச்சு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பல்வேறு ஏஐகள் பயன்படுத்தப்படுகிறது. OpenAI நிறுவனத்தின் சாட் ஜிபிடி பலருக்கும் தெரிந்த ஏஐ கருவி ஆகும். ஆனால், சமீபத்திய ஒரு ஆய்வு பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காரணம் சாட் ஜிபிடி குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான ஆலோசனைகளை வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

25
குழந்தைகளுக்கு AI ஆலோசனைகள்
Image Credit : Getty

குழந்தைகளுக்கு AI ஆலோசனைகள்

சேன்டர் ஃபார் கவுண்டரிங் டிஜிட்டல் ஹேட் (Center for Countering Digital Hate) என்ற ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள், 13 வயது சிறுவர்கள் போல நடித்து, போதைப்பொருள், தற்கொலை, உணவு பழக்க குறைபாடு போன்ற நுட்பமான விஷயங்களில் ஆலோசனை கேட்டனர். ஆரம்பத்தில் சாட் ஜிபிடி எச்சரிக்கை குறிப்புகளுடன் பாதுகாப்பான பதில்களை வழங்கினாலும், சில நேரத்தில் தற்கொலை பற்றி எழுதுவது மற்றும் மதுபானம் குடிப்பது போன்ற ஆபத்தான பரிந்துரைகளையும் கொடுத்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Articles

Related image1
வெறும் ரூ. 17,999-க்கு பக்காவான ஸ்மார்ட்போன்! பட்ஜெட் மொபைல் சந்தையில் அலப்பறை கிளப்பும் மோட்டோரோலா G96 !
Related image2
54 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.197 மட்டும் தான்.. BSNL-ன் பக்காவான ரீசார்ஜ் பிளான்
35
சாட்பாட் அபாயம்
Image Credit : Asianet News

சாட்பாட் அபாயம்

ஆய்வின் போது, அமெரிக்காவில் 70% குழந்தைகள் AI சாட்பாட்களைப் பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு ஆலோசனைகளை எளிதில் வழங்குவதாகவும் கண்டறியப்பட்டது. இதனால், தவறான அல்லது ஆபத்தான ஆலோசனைகள் குழந்தைகளின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

45
AI பயன்படுத்தும் குழந்தைகள்
Image Credit : Getty

AI பயன்படுத்தும் குழந்தைகள்

OpenAI இதை ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் சரியான, பாதுகாப்பான பதில்கள் மற்றும் ஹெல்ப்-லைன் தகவல்களை வழங்கும் வகையில் அமைப்பை மேம்படுத்துவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

55
பெற்றோர் கவனிக்க வேண்டியவை
Image Credit : Getty

பெற்றோர் கவனிக்க வேண்டியவை

இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதாவது, “பெற்றோர் தங்களின் குழந்தைகள் AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், சாட்பாட் வழங்கும் ஆபத்தான ஆலோசனைகள், ஒரு குழந்தையின் உயிரையே பறிக்கக்கூடும். AI பாதுகாப்பு குறைகள் விரைவில் சரி செய்யப்படுவது, எதிர்காலத்திற்கான மிக முக்கியமான நடவடிக்கை” எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாட்ஜிபிடி
செயற்கை நுண்ணறிவு
குழந்தைகள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved