MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மெட்ரோவில் பெண்களை வளைச்சு வளைச்சு ரகசிய வீடியோ! 5,690 பாலோவர்கள்! செல்போனை பார்த்து போலீஸ் அதிர்ச்சி!

மெட்ரோவில் பெண்களை வளைச்சு வளைச்சு ரகசிய வீடியோ! 5,690 பாலோவர்கள்! செல்போனை பார்த்து போலீஸ் அதிர்ச்சி!

பெங்களூரு மெட்ரோவில் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் 'மெட்ரோ சிக்ஸ்' என்ற பெயரில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

1 Min read
vinoth kumar
Published : May 24 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெங்களூருவில் மெட்ரோ ரயில்கள்
Image Credit : Google

பெங்களூருவில் மெட்ரோ ரயில்கள்

பெங்களூரு மெட்ரோவில் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளை பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்து மெட்ரோ சிக்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கில் பெண் பயணிகளின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பனசங்கரி போலீசார், தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் பீன்யா அருகே குற்றவாளியைக் கைது செய்தனர்.

24
மெட்ரோ சிக்ஸ்
Image Credit : Google

மெட்ரோ சிக்ஸ்

திகாந்த் முருகேஷ்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். பீன்யாவின் திகளரபாளையத்தில் வசித்து வந்த இவர், தினமும் வேலைக்குச் செல்ல மெட்ரோ சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த பயணத்தின்போது பெண் பயணிகளின் அசைவுகளை தனது செல்போனில் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் 'மெட்ரோ சிக்ஸ்' என்ற பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கி 13 வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.

Related Articles

Related image1
கூட இருந்த நண்பர்களே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்! கதறிய மருத்துவ மாணவி!
Related image2
சேலத்தில் அதிகாலையிலேயே துப்பாக்கி சத்தம்! யார் இந்த நரேஷ் குமார்? பரபரப்பு தகவல்!
34
5,690 பாலோவர்கள்
Image Credit : our own

5,690 பாலோவர்கள்

இந்தக் கணக்கிற்கு 5,690 பாலோவர்கள் இருந்தனர். இந்த வீடியோக்களுக்கு எதிராக பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து பனசங்கரி போலீசார், உடனடியாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கப் பயன்படுத்திய மொபைல் எண்ணின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

44
செல்போனில் பல வீடியோக்கள்
Image Credit : Google

செல்போனில் பல வீடியோக்கள்

குற்றவாளி திகாந்தின் செல்போனில் மேலும் பல வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது செல்போனிலேயே அனைத்து வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். அவற்றில் 13 வீடியோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு குற்றவாளியின் செல்போனை பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
பெண்கள்
இந்தியா
காவல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved