MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இஞ்சி விலை மீண்டும் உயர்ந்ததா.? தக்காளி ஒரு கிலோ என்ன விலை..? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

இஞ்சி விலை மீண்டும் உயர்ந்ததா.? தக்காளி ஒரு கிலோ என்ன விலை..? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில்லரை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் காய்கறி விலையானது கடந்த சில நாட்களாக எந்த வித உயர்வும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 14 2023, 08:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vegetables

Vegetables

காய்கறி விலை என்ன.?

கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. அதற்கு ஏற்ப விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் இன்றுசென்னை கோயம்பேடு சந்தையில்  காய்கறி விலையை பொருத்தவரை பெரிய அளவில் மாற்றம் இல்லாம்ப் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாயும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாயும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாயும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாயும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

23

முருங்கைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30, பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

33

உச்சத்தில் இஞ்சி விலை

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த இஞ்சியின் விலையானது தொடர்ந்து குறையாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சியானது தற்போது ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தக்காளி விளையானது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ 15 ரூபாய்க்கு என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image2
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Recommended image3
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved