MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிலிண்டர் விலை உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பதா.? ரூ.100 மானியம் என்ன ஆச்சு- அண்ணாமலை கேள்வி

சிலிண்டர் விலை உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பதா.? ரூ.100 மானியம் என்ன ஆச்சு- அண்ணாமலை கேள்வி

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் எல்பிஜி விலை உயர்வு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2 Min read
Ajmal Khan
Published : Apr 08 2025, 07:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

LPG cylinder price hike : வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்து உள்ளது. மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவை குறைந்த விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.41,338 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

24
Annamalai statement

Annamalai statement

சமையல் எரிவாயு விலை உயர்வு

சர்வேதேச சந்தையில் எல்பிஜி விலை உயர்ந்து வருவதாகவும், அதற்கேற்ப சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த விலை உயர்விற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமைல வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாடு, ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60%, இறக்குமதியையே சார்ந்துள்ளது.

34
cooking gas price

cooking gas price

சமையல் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் $385 ஆக இருந்தது, 2025 பிப்ரவரியில், $629 ஆக, 62% விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ₹200 விலை குறைக்கப்பட்டது. 

மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ₹100 விலை குறைப்பு செய்யப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை.

44
MK Stalin criticism

MK Stalin criticism

மானியம் என்ன ஆச்சு.?

கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதுமே, சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ₹803 ஆகவே இருந்தது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ₹503 ஆகவே இருந்து வருகிறது. உண்மை இப்படி இருக்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன.

அதனைப் பற்றி நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட பேசாமல், தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வாயு உருளை
சமையல் எரிவாயு
எரிவாயு உருளை
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved