தொடர் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
வார இறுதி நாட்கள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பயணிகள் சிரமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார விடுமுறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிவிப்பில்: இன்று முகூர்த்த நாள், நாளை (சனிக்கிழமை) மற்றும் 25ம் தேதி (ஞாயிறுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,739 சிறப்பு பேருந்துகள்
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 570 பேருந்துகளும், சனிக்கிழமை 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 100 பேருந்துகளும், நாளை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொபைல் செயலி மூலம் முன்பதிவு
மாதவரத்திலிருந்து இன்று 24 பேருந்துகளும், நாளை 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.